Category: பொருளாதாரம்
திட்டமிடுதலும் வளர்ச்சியும் – 1
ஒன்றை அவசியம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் பற்றிப் பேசுகையில், இந்திய நாட்டின் பொதுத்துறை சோசலிசத்தின் இலக்கணம் அல்ல. அதேபோல், இந்தியாவின் திட்டமிடுதலும் சோசலிசத்தின் இலக்கணம் அல்ல. மாறாக, இந்தியாவில் தனியார் துறை கம்பனிகளின் லாபத்தை உறுதிப்படுத்துவதே அரசின் திட்டமிடல் மற்றும் பொதுத்துறை கொள்கையாக இருந்தது.
மோடி ஆட்சியின் மூன்றாண்டு: பொருளாதாரத் துறையில் சீரழிவு …
பாஜக ஆட்சி இந்திய மற்றும் அந்நிய பெருமுதலாளிகளுக்கும் கிராமப் புற பெரும் செல்வந்தர்களுக்கும்தான் சாதகமாக இருந்துள்ளது. வரிச்சலுகை மட்டுமல்ல. உழைப் பாளர் பாதுகாப்பு சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வது, பெரும் தொழில் நிறுவனங்களின் கடன் பாக்கிகளை விட்டுக்கொடுக்குமாறு பொதுத் துறை வங்கிகளை நிர்ப்பந்திப்பது; பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்தி, அவற்றை அடிமாட்டு விலையில் இந்நாட்டு, பன்னாட்டு தனியார் பெருமுதலாளிகளிடம் விற்பது ஆகிய வையும் அரசின் பெருமுதலாளி ஆதரவு கொள் கைகளின் பகுதியாகும்.
நவீன தாராளமயமும் தொழிற்சங்கமும்
டாக்டர் ஹேமலதா, தலைவர், இந்திய தொழிற்சங்க மையம் 1970களில் உருவான பொருளாதார நெருக்கடிக்கு முதலாளித்துவ அமைப்பு மேற்கொண்ட எதிர்வினை நவீன தாராளமயமாகும். அமெரிக்காவும் பிரிட்டனும் 1980–களில் நவீன தாராளமயத்தை அமல்படுத்தும் வண்ணம் பொருளாதார மறுகட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்த துவங்கின. இந்தத் திட்டங்கள், பன்னாட்டு நிதி நிறுவனம், உலக வங்கி போன்ற அமைப்புகளின் உதவியுடன் உலகம் முழுவதும் திணிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டுகளில் நுழையும்பொழுது உலகில் பெரும்பாலான நாடுகள் நவீன தாராளமயக் கொள்கைகளைத் தங்கள் திட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்தத் துவங்கின.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



