Tag: ஊழல்
குடியரசின் மாண்புகளைப் பாதுகாப்போம்! மக்கள் நலன்களை முன்னேற்றுவோம்!
1950ல் குடியரசு அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டது சுதந்திர இந்தியாவின் முக்கியமான சாதனையாகும், ஐம்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன், அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை தனது குடிமக்களுக்கு ஜாதி, மத, இன, பால் பேதமின்றி சம உரிமை அளிக்கும் ஜனநாயகக் குடியரசாக அறிவித்தது. இப்போது நினைத்துப் பார்த்தால், வயது வந்தோருக்கான வாக்குரிமையுடன் கூடிய பாராளுமன்ற ஜனநாயக முறையை உருவாக்கிய அரசிய லமைப்புச் சட்டம் மிகப் பெரிய சாதனைதான் என்று தெரிகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் சொல் அமைப்பிலும், செயல்படும் முறைகளிலும், பல தடைகளும் எல்லைகளும் கொண்டதாக இருந்தாலும் கூட, சாமானியனும் அரசியலில் ஈடுபட அது வழி வகுத்தது.
வேலை உறுதி சட்டமும் – மார்க்சிஸ்ட்டுகளும்!
நாடு முழுவதும் 200 மாவட்டங்கள், தமிழகத்தில் 6 மாவட்டங்கள் என தற்போது தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டம் (2005) அமுலாக்கப்பட்டு வருகிறது. கிராம அளவில் பணிகள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேலை உறுதி சட்டம் வழங்கும் உரிமைகள், சட்டத்தின் பல முக்கிய அம்சங்கள் ஆகியவற்றை விளக்கி மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரட் விரிவான கட்டுரை எழுதியுள்ளார். (பார்க்க தீக்கதிர் 7.3.2006) இக்கட்டுரை களப்பணியாற்ற ஒரு சுருக்கமான கையேடாகவும் உதவிடும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
