Tag: நிலப்பிரபு
குடியரசின் மாண்புகளைப் பாதுகாப்போம்! மக்கள் நலன்களை முன்னேற்றுவோம்!
1950ல் குடியரசு அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டது சுதந்திர இந்தியாவின் முக்கியமான சாதனையாகும், ஐம்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன், அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை தனது குடிமக்களுக்கு ஜாதி, மத, இன, பால் பேதமின்றி சம உரிமை அளிக்கும் ஜனநாயகக் குடியரசாக அறிவித்தது. இப்போது நினைத்துப் பார்த்தால், வயது வந்தோருக்கான வாக்குரிமையுடன் கூடிய பாராளுமன்ற ஜனநாயக முறையை உருவாக்கிய அரசிய லமைப்புச் சட்டம் மிகப் பெரிய சாதனைதான் என்று தெரிகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் சொல் அமைப்பிலும், செயல்படும் முறைகளிலும், பல தடைகளும் எல்லைகளும் கொண்டதாக இருந்தாலும் கூட, சாமானியனும் அரசியலில் ஈடுபட அது வழி வகுத்தது.
தனியார்மயத்தால் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு?
தண்ணீரில் நாம் காணும் நெருக்கடி உலகளவிலான தனியார்மய சூழலாகும். இது மக்களின் அடிப்படை உரிமையாக நீரை கருத வேண்டும் என்ற கோட்பாட்டிற்கும் தண்ணீரை வைத்து சுரண்டும் உரிமை வழங்கினால் தான் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த இயலும் என்ற கோட்பாட்டிற்கும் நடக்கிற போராட்டமாகும். சமீபத்தில் மெக்ஸிகோவில் கூடிய உலக நாடுகளின் தண்ணீர் பற்றிய மாநாட்டில், பெரும்பாலான அரசுகள் குடிநீரை, அடிப்படை உரிமையாகக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கருத்தை முன்வைத்துள்ளன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

