Category: அரசியல்
சமரசமற்ற சித்தாந்த போராட்டம்
“என்ன செய்ய வேண்டும்?” : செவ்வியல் நூல் அறிமுகம் ச.லெனின் பெரும்பாலான உலக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சந்தித்த வலது மற்றும் இடது திரிபுவாதங்களை ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கமும் எதிர்கொண்டது. அவைகளுக்கு எதிரான கருத்துப் போராட்டமாகவும் ரஷ்யப் புரட்சிக்கு வழிகாட்டும் வகையிலான, இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையுடன் கூடிய சித்தாந்த தெளிவை வழங்கும் படைப்பாகவும் லெனினின் “என்ன செய்ய வேண்டும்?” நூல் விளங்கியது. இந்நூல் 1902 –ம் ஆண்டு வெளியானது. ரஷ்யாவில் வெளிவந்த ரபோச்சியே தேலோ, ரபோச்சியே மிசல்
இந்திய சூழல்கள் சில குறிப்பிட்ட பிரச்சனைகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விசாகப்பட்டினம் காங்கிரஸ் நிறைவேற்றிய அரசியல் தீர்மானம் சமகால நிகழ்வுகள் பற்றி குறிப்பிட்டிருந்த சில பகுதிகளை வாசகர்களின் கவனத்திற்காக கீழே தருகிறோம். இந்த இதழில் வெளிவந்துள்ள ‘ஒரு விரல் புரட்சி’ கட்டுரையின் தொடர்ச்சியாக இதை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஆசிரியர் குழு 10.1 இந்திய சூழலில், இன்றைய இடைமாற்ற காலத்தில் வர்க்க சக்திகளின் பலாபலம் ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக மாறியுள்ள நிலையில் நமது நீண்ட காலக் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்திய மக்கள் மத்தியில் வர்க்க சக்திகளின் பலாபலன்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு பலரும் ஒன்றுபட்டு முயற்சிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கு இன்று நாம் வாழும் மெய்யான சூழல்களில் நமது சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்த கூர்மைப்படுத்துவதற்கு மக்களின் ஆதரவு பெற்ற சக்திமிக்க மக்கள் போராட்டங்களை கட்டவிழ்த்துவிடுவது அவசியமாகிறது. 10.2 நாடாளுமன்றத்துக்குள்ளேயும், வெளியேயுமான வடிவங்கள்: இக்கடமையை நிறைவேற்றுவதற்கு மேம்படுத்தப்பட்ட கட்சித்திட்டம் பின்வருமாறு குறிப்பிடுகிறது :“மக்கள் ஜனநாயகம் மற்றும் சோஷலிச சமூக மாற்றத்தை அமைதியான வழியில் அடையவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) விழைகிறது. வலிமையான வெகுஜன புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுப்பதன் மூலமும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நடைபெறுகிற போராட்ட வடிவங்களை இணைப்பதன் மூலமும் பிறபோக்கு சக்திகளின் எதிர்ப்பை முறியடிக்க தொழிலாளி வர்க்கமும் அதன் கூட்டாளிகளும் முயல்வதோடு, அமைதியான வழிமுறைகளில் இந்த உருமாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கும். எனினும் ஆளும் வர்க்கங்கள் தங்களுடைய அதிகாரத்தை ஒருபோதும் தாமாக விட்டுத்தர மாட்டார்கள் என்பதை எப்போதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களின் விருப்பத்திற்கு மாறாக சட்டத்திற்கு புறம்பாகவும், வன்முறை மூலமாகவும் இதைப் பின்னுக்குத் தள்ள அவர்கள் முயல்வார்கள். எனவே, நாட்டின் அரசியல் வாழ்க்கையில் ஏற்படக்
தேர்தல்கள், ஒருவிரல் புரட்சியா?
என்.குணசேகரன் ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் அவ்வப்போது நிலவுகிற நிலைமைகளை அடிப்படையாகக்கொண்டு கம்யூனிஸ்டுகள் நிலை எடுக்கின்றனர். இன்றைய சூழலில் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிற கொள்கைகள், வகுப்புவாதம் போன்ற உழைக்கும் மக்கள் ஒற்றுமையை குலைக்கின்ற பிரச்சனைகளை மையமாக வைத்து நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கிற நோக்கத்துடன் பொருத்தமான அரசியல் சக்திகளோடு அணி சேர்ந்து கம்யூனிஸ்டுகள் தேர்தலை சந்திக்கின்றனர். கம்யூனிஸ்டுகளின் தொலைநோக்கு இலக்கு, தேர்தல்களில் பெறப்படும் வெற்றிகள் அல்ல; தேர்தலுடன் கம்யூனிஸ்ட்களின் கடமை முடிவடைவதில்லை. காலம் காலமாக அடிமைப்பட்டு,
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
