Category: ஆளுமைகள்
பெரியாரின் பார்வையில் பகத்சிங்!
பெரியாருக்கு பகத்சிங் கடவுள் மற்றும் கடவுளின் அருளாட்சி என்பதில் நம்பிக்கை கொண்டவரல்ல என்றும், மிகவும் தன்னம்பிக்கை கொண்ட மனிதன் என்றும் தெரியும். 1929 ஏப்ரல் 9ம் தேதி பகத்சிங் தேசிய சட்டமன்றத்தில் குண்டு வீசிய நடவடிக்கையிலிருந்து அவர் ஒரு தேசிய மாவீரனாக கருதப்பட்டார். அதுவரைக்கும் அவர் நவ்ஜவான் பாரத் சபாவின் ஒரு சிந்தனா சக்தி படைத்த வாலிபன் என்றே அவரைச் சுற்றியிருந்த பஞ்சாப் வாலிபர்கள் நினைத்தனர். மேலும் பகத்சிங் இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு இயக்கத்தின் மிகப் பெரும் தத்துவவாதியாகவும் – தலைமறைவு இயக்கத்தின் மத்தியில் அவர் ஒரு புரட்சிவாதியாகவும் எண்ணப்பட்டார்.
கல்வியும் – பண்பாடும் லெனினது சிந்தனைகள்
– பெனடிக்ற் பாலன் “ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் முதுமாளிப் பட்டமளிப்பு ஆய்விற்க்காக லெனினது கல்வி சிந்தனைகளை தேர்ந்தெடுத்து, அந்த ஆய்வு ஒரு நூலாக வெளிவந்துள்ளது. “லெனினது கல்விச் சிந்தனைகள்” என்ற தலைப்பில் இந்திய மாணவர் சங்கம் அதனை வெளியிட முடிவெடுத்துள்ளது. அவர்களின் அனுமதியோடு, கல்வியும் பண்பாடும் பற்றி லெனினது கருத்துக்களை அலசும் பகுதியை இங்கே வெளியிடுகிறோம். “சோவியத் கல்வி முறை” என்பது உலக நாடுகளுக்கே வழிகாட்டியாக இருந்தது. இன்றும் இருக்கிறது என்பதை மறுப்பவர்கள்
தோழர் பி.ஆர் பற்றிய நினைவலைகள்!
டிசம்பர் 15 – தோழர் பி. ராமமூர்த்தியின் நினைவு நாள். பன்முகத்திறனோடு இந்திய அரசியலிலும் தமிழக அரசியலிலும் களம் கண்ட அந்த தோழர் மறைந்து 20 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார தளங்களின் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பல சமயங்களில் தோழர் பி.ஆரின் நினைவு வந்து போனதுண்டு – வழிகாட்டுதல் வேண்டி. அரசியல் அரங்கில் அவர் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தீர்க்கமான வழிகாட்டுதல் கிடைத்துக் கொண்டிருந்தது. இக்கட்டுரையின் நோக்கம் ஒரு தனி மனித வழிபாட்டினை பதிவு செய்வது அல்ல; அவருடைய வாழ்க்கை சரிதத்தை விளக்கும் நோக்கமும் கொண்டதல்ல. இந்த நாட்டில் சோசலிச – கம்யூனிச கருத்துக்கள் பரவி மக்கள் மத்தியில் ஒரு பேரியக்கம் உருவாக அவர் ஆற்றிய தவக்க கால பணிகளை நினைவு கூரும் முயற்சி தான் இது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



