Category: அரசியல்
இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல…
வரலாற்று ரீதியாக ஒரு நிறுவனரால் தொடங்கப்பட்டு அதன் பிறகு ஒரு நேர்க்கோட்டு வகையில் உருவான ஆபிரஹாமிய வகைப்பட்ட மதங்களில் இருந்து (அதாவது யூத மதம், கிறித்துவம், இஸ்லாம் ஆகியவை ஆபிரஹாம் என்பவரின் வம்சாவழியாக வந்தது என்ற கருத்தை வலியுறுத்துவது) முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இந்து மதம் இருந்து வந்தது என்பதை நாம் இங்கு அங்கீகரிக்க வேண்டியது அவசியம். இந்து மதத்தின் உள்ளார்ந்த அம்சமான பன்முகத் தன்மை மற்றும் பன்முக வாதம் ஆகியவற்றுக்குப் பதிலாக ஒற்றைக் கடவுள் வடிவத்தை அதற்குக் கொடுத்து, இந்துக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அனைவருக்கும் அதை ஒரே மாதிரியாக அமல்படுத்த முயற்சித்து வரும் இந்துத்துவா தத்துவத்தின் இந்த முயற்சியானது காலனிய வகைப்பட்ட சிந்தனை வடிவத்தை தொடர்ந்து பயன்படுத்தும் ஒரு முயற்சியே ஆகும்.
தோழர் உமாநாத்: வர்க்கப் போராட்டக் களத்தின் விளைச்சல்
சென்னை சதி வழக்கில், சிறைத் தண்டனையிலிருந்து விடுதலை பெற்ற பின் கட்சி அவரை தொழிற்சங்க பணிக்கு அனுப்பியது. அரைப்பட்டினியுடன்தான் பணிகளை முன்னெடுக்க வேண்டியிருக்கும். தொழிலாளர்களை சங்கமாக்குவதும் எளிதான காரியமாக இல்லை. காவல்துறை அடக்குமுறையும், முதலாளிகளால் ஏவப்படும் சமூக விரோதிகளின் தாக்குதல் உட்பட எதிர்கொண்டு, கோவை மண்ணில்தான் அவர் தொழிற்சங்க பால பாடத்தை கற்றார்.
மோடி அரசின் பாசிச போக்குகள்: டோக்ளியாட்டி தரும் வெளிச்சத்தில் ஒரு பார்வை
பாசிசமானது ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு வடிவம் எடுக்கும் . ஒரே நாட்டில் கூட அந்தந்த கால கட்டத்திற்கேற்ப அதன் நோக்கங்கள், அணுகுமுறைகள் மாறும். ஏகபோக முதலாளித்துவம் நெருக்கடியை எதிர்கொள்ளும் பொழுது, பூர்ஷ்வா சக்திகள் சில “முதலாளித்துவ ஜனநாயக” நெறிமுறைகளை கைவிட்டுவிட்டு பாசிசத்தின்பால் திரும்பும் என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் டோக்ளியாட்டி விளக்குகிறார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
