Category: புத்தகங்கள்
கார்ல் மார்க்சின் ‘கூலி உழைப்பும் மூலதனமும்’
1849 இல் மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்கள் இன்றும் பொருந்துமென்றால் அவை காலத்தை வென்றவையல்லவா? ‘கூலி உழைப்பும் மூலதனமும்’ என்ற நூலின் இன்னொரு சிறப்பு மாமேதை மார்க்ஸ் தத்துவராக மட்டுமல்ல, சாதாரணத் தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு தினசரிப் பத்திரிக்கையில் இந்நூலை எழுதினார் என்பதும் தான்!
ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம்!
தமிழ்ச் சூழலில் பெண்ணியம் வலுப்பெற்றிருக்கின்ற காலம் இது. படைப்பு ரீதியாகவும், அமைப்புகள் வாயிலாகவும் பெண்ணிய வாதிகள் தொடர்ந்து இயங்கி வந்தது பெண்ணியக் கோட்பாடுகளை வலுவாக நிறுவிக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. பெண் விடுதலை குறித்து உரத்த குரல் எழுப்பத் தேவையுள்ள மாநிலமாகவே தமிழகம் இருந்து வந்திருக்கிறது. எல்லோரும் பெண்ணியம் குறித்து கதைக்க வந்தது துரதிர்ஷ்டவசமானதும் அன்று. கற்பனைப் புராண காலத்தும் அதன் தேவை இருந்திருக்கிறது. சங்க காலத்திலும், பெண்ணியக் குரல்கள் ஒலித்துள்ளன. உலகம் இத்தனை நவீன மயமாக்கப்பட்ட பின்பும், இதன் தேவை தொடர்வதன் பின்னணி குறித்து சிந்திக்கையில் ஆணாதிக்கப் போக்கு எங்கும் வியாபித் திருந்ததன்றி வேறென்ன என்னும் விடை கிடைக்கிறது.
பாட்டாளி வர்க்கத்திற்கு புதிய குரல் கொடுக்கும் – ஒரு புதினம் – சுரங்கம்
கு.சி.பா என்று நம்மால் அன்போடு அழைக்கப்படும் கு.சின்னப்ப பாரதியின் பேனாவிலிருந்து ஒரு கதை பிறக்கிறது என்றால் அது நிச்சயம் பாட்டாளி வர்க்கத்தின் குரலோடுதான் பிறக்கும். அவரது தாகம் முதல் அண்மையில் வெளிவந்த சுரங்கம் வரை பாட்டாளி வர்க்கத்தின் போர்க்குண முத்திரை பதிந்திருப்பதை படிப்போர் உணர்வர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


