Author: Editorial
லெனின் 150: புதியதொரு சகாப்தம்
ஒட்டுமொத்த உலகமும் அனைத்து முதலாளித்துவ அமைப்பும் ஏகாதிபத்தியத்தால் ஒரே குடையின்கீழ் வந்து விட்டது. அதன் பலவீனமான கண்ணியில் தாக்குதல் தொடுத்தால் அதை உடைத்தெறிய முடியும் என்றார் லெனின். ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகளின் விளைவே முதலாம் உலகப் போர் என்றும் அதன் விளைவாக ஜாரின் ஆளுகையில் இருந்த ரஷ்யா அத்தகைய பலவீனமான கண்ணியாக உள்ளது என்பதையும் லெனின் தான் முதலில் சுட்டிக் காட்டினார்.
உள்ளே வெளியே இரண்டும் ஓன்றுதான்: இடம்பெயர் தொழிலாளர்களின் கொரொனா கால போராட்டம்
பொதுமுடக்க காலகட்டத்திற்கான சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும், பொதுமுடக்கத்திற்கு முன்னதாக செய்த வேலைக்கான சம்பளம் கிடைக்கவில்லை என இடம்பெயர் தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பொதுமுடக்கத்தின் நீட்சியும் முன்னர் செய்த வேலைகான சம்பளம் கிடைக்கவில்லை எனும் சூழலும் இடம்பெயர் தொழிலாளர்களை முற்றிலுமாக முடக்கி போட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பெண்கள் மீதான வன்முறை
பெண்களை சகமனுஷியாகப் பார்க்காமல் அவர்களை “உற்பத்திக் கருவியாகவும்“ அதன் உடைமையாளனாகவும் ஆணாதிக்க சமூகம் தன்னை நிலை நிறுத்திக்கொண்டது. எனவேதான் கம்யூனிச சமூகத்தில் எல்லா உடைமைகளும் பொதுவுடைமையாகும் என்பதை அறிந்த அவர்கள் பெண்களும் பொதுவாக்கப்படுவார்கள் என்று கூறினர். இத்தகைய பாசாங்கான வழிமுறைகளில் பொதுவில் ஒரு அறச்சீற்றத்தை கையாண்டனர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
