Author: Editorial
இடதுசாரி கட்சிகளின் குணாம்சங்கள்!
2004 ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் பயனாக ஒரு கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அதற்கு தலைமை தாங்கும் பொறுப்பு காங்கிரஸ் மீது விழுந்தது. இது ஒரு விசேஷமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கியது. அதிலும் குறிப்பாக இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு கூட்டு மந்திரி சபைக்கு அவசியம் தேவை என்ற நிலைமை ஏற்பட்டது.
இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அடிப்படைவாதிகள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா கண்டத்தில் பெரும் விவாதம் நடந்து கொண்டிருந்தது. அதாவது ஆரிய இனத்தில் பிறப்பவர் அறிவாளி என்றும், வேறு இனங்களில் பிறக்கும் குழந்தைக்கு அவ்வளவு மதிநுட்பம் இருப்பதில்லை என்றும் விவாதம் நடந்தது. அதேபோல் தான், உயர்கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதமானம் இட ஒதுக்கீடு என்கிற, மத்திய அரசின் முடிவுக்கு, எதிரான விவாதங்களும் நடைபெறுகிறது. தகுதி என்பது, அவரவர் வளருகிற சமூக சூழ்நிலையில் இருந்தே உருவாகிறது. பிறக்கும் போதே எல்லோரும் எல்லாத் தகுதிகளுடன் பிறப்பதில்லை. உலகமயமாக்கல் கொள்கையைப் பற்றி குறிப்பிடுகிறபோது, அடிப்படைவாதம் உலக மயமாக்கலோடு சமரசம் செய்து கொள்கிறது என்று சமீர் அமீன் குறிப்பிடுகிறார். இங்கே அடிப்படை வாதம் என்பது மத, சாதி மற்றும் இன ரீதியிலான ஆதிக்க மனப்பான்மை ஆகும்.
கட்சி அமைப்பின் அவசியம்!
நமது கட்சியின் அகில இந்திய 18வது மாநாடு நடத்திய கட்சி அமைப்பு பற்றிய பரிசீலனை அறிக்கையின் கோடிட்டு காட்ட வேண்டிய பகுதி என்று எங்களுக்கு பட்டதை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மக்கள் மனதை கவ்விப்பிடிக்கும் ஒர புரட்சிகரமான பாட்டாளி வர்க்க கட்சியாக நாம் உயர அயராது பாடுபட வேண்டியுள்ளது. இன்றைய பலகீனத்தை களைந்து, நாடு தழுவிய அளவில் நமது செயல் விரிவடைய வேண்டுமானால், திட்டமிட்ட செயல் பாடுகள் அவசியமாகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
