Author: Editorial
இந்திய அரசியல் அமைப்பும் கூட்டாட்சி கோட்பாடும் …
மத்திய அரசு பேராதிக்கம் பெற்றதாய் ஏகபோக அதிகாரம் கொண்டதாய் இருந்து வந்தது. இத்தகைய அரசியல் அமைப்பு முறையின் நெகிழ்ச்சியற்ற தன்மை எதிர்ப்புகளை எதிர்கொண்டது. திமுக, அகாலிதளம் போன்ற பிராந்திய கட்சிகள் எழுச்சி பெற்றது இதன் துவக்கமாகும். இதன் தொடர்ச்சியாக பிராந்திய கட்சிகள் பல்கிப் பெருகின.
ஜோதிபாபூலே: சமூக சீர்திருத்தத்தின் தந்தை
பகுதி -2 புலே ஒரு முதல் சூத்திர அறிஞர். அவரே தன்னைப் பற்றி மதிப்பீடு செய்ய விரும்பியது போல பெண்பால் பற்றிய கேள்விகளை முதலில் ஆராய்ந்தவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. இந்தப் பிரச்சினையில் அடித்தளமான மனித நேயப் பார்வை கொண்டால் போதும் என்ற மனநிலையை இந்திய மறுமலர்ச்சியின் சமூக சீர்திருத்தவாதிகள் பலரும் கொண்டனர். அவர்களது அணுகுமுறை வரலாற்று நோக்கமும், தாராளமனப்பாங்கும் முற்போக்கும் கொண்டதாக இருந்தது. அவர்களது பிரச்சாரத்திலும், செயலிலும் மேல் ஜாதியினரின் வெறுப்பு மேலோட்டமாக வெளிப்பட்டது.
இந்திய அரசியல் அமைப்பும் கூட்டாட்சி கோட்பாடும்
இந்திய நாடு கூட்டாட்சி கோட்பாட்டின் ஒரு சில அம்சங்களை உள்ளடக்கிய ஒரு அரசியல் சாசனத்தையும், அரசியல் அமைப்பு முறையையும் கொண்டுள்ளது. அரசியல் சட்டம் மத்திய அரசுக்கு உயர் அதிகாரங்களை வழங்கியுள்ளது. இது நிர்வாக அதிகாரத்தையும், நிதி அதிகாரத்தையும் குவித்துள்ளது. அதே நேரத்தில் வரையறுக்கப்பட்ட விதத்தில் மத்திய மாநில அரசுகளுக்குகிடையில் அதிகாரங்களையும் ஆதாரங்களையும் பகிர்ந்து கொள்தலும் இருந்து வருகிறது. விடுதலை பெறும் தறுவாயில் நிகழ்ந்த தேசப் பிரிவினையின் அனுபவங்கள், அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களை பாதிக்கச் செய்தது. இதுவே கூட்டாட்சி
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
