ஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …
இந்தியாவின் பன்முகத்தன்மையை முற்றாக அழித்து ஆர்.எஸ்.எஸ்- இன் ஒற்றை பண்பாட்டை திணிக்கும் வேலையை மத்திய பா.ஜ.க அரசு அனைத்து வழிகளிலும் செய்து வருகிறது. ஒரே நாடு-ஒரே மொழி, ஒரே நாடு – ஒரே ரேஷன் அட்டை, ஒரே நாடு ஒரே சட்டம் போன்ற வார்த்தை ஜாலங்களோடு, தீவிர முதலாளித்துவ சுரண்டலுக்கும் அது வசதி செய்து தருகிறது. மாநிலங்களின் உரிமைகளை தகர்ப்பது, கல்வி, வேலை உள்ளிட்ட பொதுப்பட்டியலில் உள்ள விஷயங்களில் கூட மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் பல்வேறு சட்டத்
எங்கெல்ஸ் 125: மார்க்சியத்தின் அடித்தளம் எங்கெல்ஸ்
மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் அவர் வாழ்வதற்கும், காலத்தை வென்று மார்க்ஸ் என்றும் நிலைத்து நிற்பதற்கும், மார்க்சிய தத்துவம் வலுவான அடித்தளம் பெறுவதற்கும் எங்கெல்சின் அயராத பங்களிப்பே அனைத்திற்கும் அடிப்படையாக திகழ்ந்தது என்பதே உண்மை.
கல்வியும் கம்யூனிஸ்டுகளும்
கல்வியை வழங்குவது அரசின் கடமை என்பது காலாவதியாகிப் போன முழக்கமாக மாற்றப்பட்டது. இரு வேறு கல்வி முறை கூர்மையாக பிரித்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. உற்பத்தித் துறைக்கு மாறாக, வணிக, சேவைத் துறைக்கு உகந்ததாக கல்வி அமைப்பு செயல்படத் தொடங்கியது. இத்தகைய தாராளமய, தனியார்மய பாதை பெருமுதலாளிகளுக்கு ஏராளமான பலன்களை தந்தது. புதிய வர்த்தக நிறுவனங்கள் தோன்றி பெருமுதலாளித்துவ நிறுவனங்களாக விரிவடைந்தன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
