உலகமயமாகும் நிலச்சீர்திருத்த அரசியல்!
உலகமயம் இது பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் கோஷம். ஏகாதிபத்திய நவீன சுரண்டலின் புதிய வடிவம். உலக மக்கள் வெறுக்கும் விரிவாக்கம்; இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக உலகளவில் தொழிலாளர்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும், இடதுசாரி – ஜனநாயக அமைப்புகளும் போராட்ட இயக்கங்களை கட்டியெழுப்பி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உலக சமூக மாமன்றம் போன்ற அமைப்புகள் விரிந்த சங்கிலி இணைப்புகளை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 1848-இல் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று மார்க்சும் – ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் முன்வைத்த முழக்கம் இன்று நிஜமாகி வருகிறது.
இடஒதுக்கீடு பிரச்சனை : ஜனநாயக இயக்கத்தின் பார்வை
பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதம் இட ஒதுக்கீடு செய்வது என்ற மத்திய அரசின் அண்மைக்கால முடிவு சில வட்டாரங்களிலிருந்து கடுமையான எதிர்ப்பைச்சந்தித்துள்ளது. நமது நாட்டு ஊடகங்கள் – தொலைக்காட்சி, பத்திரிக்கை, இணைய தளம் இத்யாதி பெரும்பாலும், அரசின் முடிவிற்கு எதிராக அந்தஸ்து மிகுந்த மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ சமுதாயத்தில் ஒரு சிறிய பகுதியினர் நடத்தி வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக, செய்தி – பிரச்சாரம் மேற் கொண்டுள்ளன.
பொருளாதார தத்துவத்தின் வறுமை!
வறுமையின் தத்துவம் என்று புருதோன் எழுதிய புத்தகத்திற்கு பதில் கொடுக்கும் வகையில் மார்க்ஸ் எழுதிய புத்தகம் தான் தத்துவத்தின் வறுமை. ஆனால், இந்தக்கட்டுரை அதை விளக்கிச் சொல்ல எழுதப்பட்டதொன்று அல்ல. இரண்டாண்டு கால ஐக்கிய முன்னணி அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு அடிப்படையாக இருக்கும் தத்துவப் பார்வையை விமர்சன ரீதியில் ஆய்வு செய்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
