Tag: எங்கெல்ஸ்
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்!
“மார்க்ஸ் மற்றும் எங்கெல்சை அறிந்து கொள்ளும் இந்த ஆய்வு அவர்கள் உருவாக்கி செயல்படுத்திய விஞ்ஞான ரீதியான முறையிலேயே பயன்படுத்தி செய்யப்படுவதாகும். ஒவ்வொரு தனி மனிதனும் குறிப்பிட்ட சமூக சூழலின் படைப்பே ஆவான்.
கம்யூனிஸ்ட் அறிக்கை முகவுரைகளின் முக்கியத்துவம்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 1847 ஆம் ஆண்டு நவம்பரில் லண்டனில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கழகம் என்கிற ரகசியமாக செயல்பட வேண்டியிருந்த அமைப்பின் தத்துவார்த்த நடவடிக்கை வேலைத்திட்டமாக காரல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அறிக்கையின் மேன்மை, மகத்துவம், அமரத்துவம் ஆகியவைகளுக்கு அவ்வப்போது சந்தேகங்கள் எழுப்பப்படுவதும் அதன் மீது விவாதங்கள் நடப்பதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் விவாதங்களின் முடிவில் கம்யூனிஸ்ட் அறிக்கை தனது மேதாவிலாசத்தை உலகுக்கு உணர்த்தி தன்னுடைய தத்துவ மேலாண்மையை நிலைநிறுத்தியே வந்திருக்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


