Tag: கியூபா
நஞ்சு கலந்த வரலாற்றுத் திருத்தங்கள் – ஏகாதிபத்தியத்தின் புதிய சாகசம்
நாட்டு மக்களே! வரலாற்றிலிருந்து நாம் நழுவ இயலாது இப்படிச் சொன்னவர் ஆப்ரஹாம் லிங்கன். ஆனால் நழுவுதல் என்னவோ நடந்து கொண்டு தான் இருக்கிறது. வரலாறு மறைக்கப்படுவதும், மறுக்கப்படுவதும் அல்லது திருத்தப்படுவதும் அந்த நழுவுதலின் சில வடிவங்கள் ஆகும். அத்தகைய முயற்சிகளுக்கு தற்போது புதிய வேகம் கிடைத்திருக்கின்றது. இந்தச் சூழலில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மையங்கள் பல்வேறு வடிவங்களில் உருவாவதையும் காண்கிறோம்.
உலகமயமாகும் நிலச்சீர்திருத்த அரசியல்!
உலகமயம் இது பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் கோஷம். ஏகாதிபத்திய நவீன சுரண்டலின் புதிய வடிவம். உலக மக்கள் வெறுக்கும் விரிவாக்கம்; இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக உலகளவில் தொழிலாளர்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும், இடதுசாரி – ஜனநாயக அமைப்புகளும் போராட்ட இயக்கங்களை கட்டியெழுப்பி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உலக சமூக மாமன்றம் போன்ற அமைப்புகள் விரிந்த சங்கிலி இணைப்புகளை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 1848-இல் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று மார்க்சும் – ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் முன்வைத்த முழக்கம் இன்று நிஜமாகி வருகிறது.
காஸ்ட்ரோவும் – புரட்சியும்!
அமெரிக்கர்களால் இந்த புரட்சிகர நடவடிக்கை யினை அழித்துவிட முடியாது; ஏனெனில் எம் தேச மக்கள் ஆயுதந்தாங்க பயிற்சி பெற்றவர்கள். ஆனால், எங்கள் தவறுகளை நாங்கள் திருத்திக்கொள்ள முடியாமல் போனால், இந்நாடு தன்னைத்தானே அழித்துக்கொள்ள முடியும். இந்தக் காரணத்திற் காகத்தான், நாங்கள் முழுமையான சமூக மாற்றத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
