Tag: கூலி
மே தினத்தின் புரட்சிகரப் பாரம்பரியம்
உலகெங்கும் உள்ள உழைப்பாளர்களின் ஒருமைப்பாட்டையும் போராட்ட உணர்வையும் மே தினக் கொண்டாட்டாங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த ஆண்டு உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் மே தினத்தைக் கொண்டாடும் போது இந்திய பாட்டாளி வர்க்கம் ஒரு கடுமையான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்தியாவின் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. இந்தத் தேர்தல் களத்தில் உலகின் பல்வேறு பகுதியிலுள்ள பாட்டாளி மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை இந்தியப் பாட்டாளி வர்க்கமும் எழுப்பியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தை பொறுத்த வரை கூலி, பணிப்பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, சமூகப் பாதகாப்பு போன்றவை முக்கியமான சில பிரச்சினைகளாகும்.
மார்க்ஸ் பிறந்த தினம் மே – 5
தொழிலாளர்கள் அவர்களின் உழைப்புச் சக்திக்காக முன்போலவே இன்னும் அதே பணத் தொகையைப் பெறுகின்றனர் என வைத்துக் கொள்வோம். அவர்களுடைய கூலி குறைந்து விடவில்லையா? நிச்சயமாகக் குறைந்து விட்டது. அதே அளவு பணத்தைக் கொடுத்துக் குறைவான ரொட்டியும், இறைச்சியும், பிறவும் பெற்றனர். தொழிலாளர்களின் கூலி குறைந்தது, வெள்ளியின் மதிப்புக் குறைவாக இருந்த காரணத்தால் அல்ல, பிழைப்பாதாரப் பொருள்களின் மதிப்பு ஏறிவிட்ட காரணத்தால்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


