Tag: சி.ஐ.ஏ
by EditorialMarch 10, 2013
புதிய மனிதன் ஹியுகோ சாவேசும் பொலிவேரியன் புரட்சியும்
முதலாளித்துவ அமைப்பில் ஜனநாயகம் இருக்க இயலாது. முதலாளித்துவம் என்பது அநீதி ஆட்சி செய்யும் இடமாகவும், பணக்காரர்கள் ஏழைகளுக்கெதிரான கொடுமை கள் செய்யும் அமைப்பாகவும் இருக்கிறது.. அதிகாரம் பலம் படைத்தவர்கள் பலமற்ற ஏழைகளை நசுக்குகிறார்கள். சட்டத்தின் ஆட்சி மட்டுமே அவர்களை விடுவிக்கு மென்று ரூசோ சொன்னார். உலகை ஜனநாயக சோசலிசத் தின் மூலம் மட்டுமே காப்பாற்ற முடியும். ஜனநாயகமென்பது 5 ஆண்டிற்கு ஒரு முறை வாக்குரிமை கொடுப்பது மட்டுமல்ல. அதைவிட அதிகமானது. அது ஒரு வாழ்வியல் வழி. அது மக்கள் கையில் அதிகாரத்தை கொடுப்பது. மேலை நாட்டு முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி என்று கூறப்படுகிற நாடுகளில் இருப்பதைப்போல்.பணக்காரர்களின் அரசு ஏழைகளை ஆட்சி செய்வதல்ல.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

