Tag: டாலர்
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் ஆழமடையும் இந்திய பொருளாதார நெருக்கடியும்
கடந்த பல மாதங்களாக அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. அண்மையில் இந்த வீழ்ச்சி, வேகம் அடைந்துள்ளது. ஜனவரி 2012 இல் ஒரு அமெரிக்க டாலருக்கு 44 ரூபாய் என்று இருந்த நிலை மாறி 2013 செப்டம்பர் துவக்கத்தில் 68 என்று அதிகரித்தது. அதாவது 50 சதவிகிதத்துக்கும் அதிகமான சரிவு. அதிலும் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி 15 நாட்களில் மட்டும் 25% சரிவு. இது ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. மத்திய அரசு தினம் ஒரு குழப்பமான அறிக்கைவிட்ட வண்ணம் உள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பு ஏற்றவுடன், நம்பிக்கை அடிப்படையில் ரூபாய் மதிப்பு சிறிது அளவு மீட்சி அடைந்துள்ளது. மீட்சி தொடருமா? என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது? செய்ய வேண்டியது என்ன? நாம் காணும் நிகழ்வுகள் மக்களை எப்படி பாதிக்கும்? ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ள தற்கும் இந்திய பொருளாதார கட்டமைப்பு மற்றும் அரசின் கொள்கைகள் ஆகியவற்றிற்கும் என்ன தொடர்பு? பிரச்சினைக்குக் காரணம் பன்னாட்டு நிகழ்வுகள்தானா? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.
நாணய மாற்றுதலை – தறிகெட்டு அலையவிடலாமா?
நாணய மாற்றுதலில் (மணி – கன்வெர்ட்டபிலிட்டி) தாராள மயத்தை முழுமையாகப் புகுத்த மீண்டும் ஒரு முயற்சி நடக்கிறது. இதனை ஒட்டி ஒரு சூடான சர்ச்சை அரசாங்க மேல்மட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சர்ச்சைகளில் பங்கு பெறுவோர் அமைச்சர்கள், மேல்மட்ட அதிகாரிகள், அரசிடம் சம்பளம் பெறும் நிபுணர்கள், வங்கிகளின் தலைமைப் பீடங்கள், இவர்களோடு எல்லா வகையிலும், நெருக்கமாக குடும்பப் பாசத்தோடு இருக்கும் பெரு முதலாளிகளிடம் சேவகம் செய்யவே பிறப்பெடுத்த கொழுத்த சம்பளம் பெறும் மூளைகள் இவர்கள் எல்லாம் ஒரு பக்கமாக நிற்கிறார்கள்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

