Tag: பகத்சிங்
பெரியாரின் பார்வையில் பகத்சிங்!
பெரியாருக்கு பகத்சிங் கடவுள் மற்றும் கடவுளின் அருளாட்சி என்பதில் நம்பிக்கை கொண்டவரல்ல என்றும், மிகவும் தன்னம்பிக்கை கொண்ட மனிதன் என்றும் தெரியும். 1929 ஏப்ரல் 9ம் தேதி பகத்சிங் தேசிய சட்டமன்றத்தில் குண்டு வீசிய நடவடிக்கையிலிருந்து அவர் ஒரு தேசிய மாவீரனாக கருதப்பட்டார். அதுவரைக்கும் அவர் நவ்ஜவான் பாரத் சபாவின் ஒரு சிந்தனா சக்தி படைத்த வாலிபன் என்றே அவரைச் சுற்றியிருந்த பஞ்சாப் வாலிபர்கள் நினைத்தனர். மேலும் பகத்சிங் இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு இயக்கத்தின் மிகப் பெரும் தத்துவவாதியாகவும் – தலைமறைவு இயக்கத்தின் மத்தியில் அவர் ஒரு புரட்சிவாதியாகவும் எண்ணப்பட்டார்.
பகத்சிங்கின் சிந்தனைகளும் தியாகமும் … (Nov 2007)
இன்றைய அரசியல் தலைவர்களில் பலருக்கும், பகத்சிங் குறித்த புரிதல், “கைது செய்யப்படும் வரை வன்முறையைத் தத்துவமாகக் கொண்டவன்தான் பகத்சிங், சிறையில் படித்ததன் மூலமாகவே சோசலிசக் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டான்” என்பதாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


