Tag: பாஜக
கொரோனா காலத்திலும் தொடரும் வகுப்புவாத அணிதிரட்டல்
சுபாஷிணிஅலி 2020 முதல் நமது நாடு கொரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக ஏராளமான இறப்புகளையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டு, நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் வேளையிலும் சங்க பரிவாரம் தனது வகுப்புவாத அணிதிரட்டல் நிகழ்ச்சி நிரலை நிறுத்தவில்லை என்று சொன்னால் மக்கள் ஆச்சரியப்படுவார்கள். உண்மை என்னவென்றால், சங்க பரிவாரத்திற்கு அதனுடைய இரண்டு நோக்கங்களை அடைவதற்கு வகுப்புவாத அணிதிரட்டல் என்பது மிகவும் முக்கியமானது. இந்து ராஷ்டிராவை நிர்மாணிப்பது என்பது, அல்லது மனுஸ்மிருதியின் கொள்கைகளால் வழிநடத்தப்படுகிற அந்நிய, இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு
இந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்!
குடியுரிமை என்பதை தன் அரசியலுக்கான புதிய ஆயுதமாக தீட்டத்தொடங்கியிருக்கிறது பாஜக. குடியுரிமை சட்டத் திருத்தத்தை கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும் செய்தது. அதில் மத அடிப்படையில் இந்தியக் குடியுரிமையை தீர்மானிக்கும் தன் நோக்கத்தை அப்பட்டமாகவே வெளிப்படுத்தியுள்ளது.
அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்
பாஜக ஆட்சியில் பெருமளவு அதிகாரங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தம் வசம் குவித்துக் கொள்வதை வெறும் எதேச்சாதிகார நடவடிக்கையாக, மீறலாக மட்டும் பார்க்க இயலாது. பாஜக அரசு இப்படித் தான் இயங்கும். அதன் சித்தாந்தம் அப்படி. வேறு வகையிலான அறிவிப்புகள், வாய் ஜாலங்கள் அனைத்தும் புலியின் மீது போர்த்தப்பட்ட பசு தோல் தான்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
