Tag: புரட்சி
தடைகளைத் தகர்த்து முன்னேறும் கியூபா!
கியூபாவின் ராணுவ சர்வாதிகாரி படிஸ்ட்டா அரசை வீழ்த்திடும் நோக்கில், மான்கடா படைத் தளத்தின் மீது ஃபிடல் தலைமையிலான புரட்சிகர குழு தாக்குதல் துவக்கிய நாள் 1953ம் ஆண்டு ஜூலை 26. 1959 ஜனவரியில் புரட்சி வெற்றி பெற்று, தன்னை சோசலிச நாடாக பிரகடனம் செய்த நாள் முதல், கியூபாவின் தேசிய விடுமுறை தினமாக ஜூலை 26, அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அரசு அலுவலகங்களில் இனிப்பு வழங்கும் விழாவாக காண இயலவில்லை. இல்லம் தோறும் இனிப்பு
மே தினத்தின் புரட்சிகரப் பாரம்பரியம்
உலகெங்கும் உள்ள உழைப்பாளர்களின் ஒருமைப்பாட்டையும் போராட்ட உணர்வையும் மே தினக் கொண்டாட்டாங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த ஆண்டு உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் மே தினத்தைக் கொண்டாடும் போது இந்திய பாட்டாளி வர்க்கம் ஒரு கடுமையான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்தியாவின் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. இந்தத் தேர்தல் களத்தில் உலகின் பல்வேறு பகுதியிலுள்ள பாட்டாளி மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை இந்தியப் பாட்டாளி வர்க்கமும் எழுப்பியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தை பொறுத்த வரை கூலி, பணிப்பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, சமூகப் பாதகாப்பு போன்றவை முக்கியமான சில பிரச்சினைகளாகும்.
சோவியத் புரட்சியின் அரசியல் தாக்கம்
நீடித்து நிற்பவைகள் 1917ல் நடந்த சோவியத் புரட்சி உலகைக் குலுக்கிய நிகழ்வாகும்.வரலாற்றில்,வந்து போன”அந்த நாள்” என்று பழங்கதையாய்ப் போன நிகழ்வல்ல. அதன் தாக்கம் எதிர்காலம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. எல்லா நாடுகளின் அரசியலியலும் நேரடியாகவோ, மறை முகமாகவோ, சோவியத் புரட்சி தூண்டிய,அரசியல் இலக்குகள், இன்று பேசும் பொருளாகி விட்டன. (அ) அரசியல் அதிகாரம் எந்த வர்க்கத்தின் கையில் இருக்க வேண்டும். (ஆ) அரசு அடக்குமுறை கருவியாக இருப்பதை உதிரச் செய்வது எப்படி?. (இ) உலக நாடுகளிடையே நட்புணர்வை உருவாக்கிட
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



