Tag: மார்க்ஸ்
கம்யூனிஸ்ட்டுகளும் – கருத்துப் போராட்டமும் – II
சென்ற இதழில் (அக்டோபர் 2006) புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ள ஒரு முக்கிய அம்சத்தை சுட்டிக் காட்டி யிருந்தேன். உண்மையான மார்க்சிஸ்ட் கருத்துகளுக்கு மாறுபட்ட அல்லது தவறான கருத்துக்களை முன்வைத்த பலவிதமான சித்தாந்தப் போக்குகளை கூர்மையாக அந்த அறிக்கை விமர்சனம் செய்தது பற்றி குறிப்பிட்டிருந்தோம். கற்பனாவாத சோசலிசத்திற்கும், விஞ்ஞான சோசலிசத்திற்கும் உள்ள அடிப்படையான வேற்றுமை களை எவ்வாறு மார்க்சும் – ஏங்கெல்சும் விளக்கினார்கள்? என்பதைக் கண்டோம்.
வெல்வதற்கோர் பொன்னுலகம்!
சமுதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொருள்முதல்வாதம்; வளர்ச்சி பற்றிய மிக விரிவான, மிக ஆழமான போதனையாகிய இயக்கவியல்; வர்க்கப் போராட்டத்தையும், ஒரு புதிய, கம்யூனிச சமுதாயத்தின் படைப் பாளனாகிய பாட்டாளி வர்க்கத்திற்குள்ள உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகர பாத்திரத்தையும் பற்றிய தத்துவம் – இவையாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதைக்குரிய தெளிவோடும், ஒளிச்சுடரோடும் எடுத் துரைக்கிறது. மாமேதை லெனின் அவர்கள் மார்க்சும், ஏங்கல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பற்றி தெரிவித்துள்ள கருத்தாகும்.
பொருளாதார தத்துவத்தின் வறுமை!
வறுமையின் தத்துவம் என்று புருதோன் எழுதிய புத்தகத்திற்கு பதில் கொடுக்கும் வகையில் மார்க்ஸ் எழுதிய புத்தகம் தான் தத்துவத்தின் வறுமை. ஆனால், இந்தக்கட்டுரை அதை விளக்கிச் சொல்ல எழுதப்பட்டதொன்று அல்ல. இரண்டாண்டு கால ஐக்கிய முன்னணி அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு அடிப்படையாக இருக்கும் தத்துவப் பார்வையை விமர்சன ரீதியில் ஆய்வு செய்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

