Tag: மீரட் சதி வழக்கு
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தத்துவார்த்த தமிழ் ஏடாக மலரும் மார்க்சிஸ்ட் முதல் மாத இதழ் இதோ தமிழக வாசகர்களையும் கட்சித் தோழர்களையும் ஆதர வாளர்களையும் சந்திக்கிறது. இப்படியொரு மாதாந்திர ஏட்டைக் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?
இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு – ஆரம்ப கால ஆண்டுகள் (1920 – 1933)
1924ம் ஆண்டு லெனின் மறைவுக்குப்பிறகு, ராய் தனது அதிதீவிரவாதக் கருத்துக்களை அகிலத்தின் 5வது மாநாட்டில் முன்வைத்தார். தேசிய விடுதலை இயக்கத்தில் தேசிய முதலாளிகளின் பங்கினை நிராகரிக்கும் போக்கும், சுரண்டப்பட்ட வர்க்கங்களின் புரட்சிகரமான உணர்வு பற்றிய அவரின் அதீத மதிப்பீடும் அதில் தெரிந்தது. ஆனால், அகிலம் அதை நிராகரித்தது. காலனி நாடுகளில் கூட்டு செயல்பாட்டின் தேவையினை உறுதி செய்தது. பின்பு சோவியத் கம்யுனிஸ்ட் கட்சியின் 14வது மாநாட்டில் தோழர். ஸ்டாலின் காலனி நாடுகளின் கம்யூனிஸ்டுகள் முதலாளி வர்க்கத்தில் உள்ள புரட்சிகரமான பிரிவினருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியதும் கவனத்துக்குரியது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


