Tag: ம. சிங்காரவேலர்
மதங்களும், அரசியலும் – ம.சிங்காரவேலர்
இவ்வளவு பேரும் கற்பனையை வளர்த்தும், ஆதரித்தும், கோடான கோடி மாந்தர்கள் மூடபழக்கத்தில் ஜீவனத்தை நடத்தி வருகின்றார்கள் என்றால் மதங்கள் மிகவும் தலைமுறையாக ஆழ்ந்து கிடந்துவர தங்கள் பொருளாதார நன்மையாக இருந்து வருகின்றதென்று சமுதாயிகள் அதாவது சமதர்மவாதிகள் சொல்வது எவ்வளவு பொருத்தமுள்ளது என்பதை நினைக்க வேண்டி இருக்கின்றதென்பதைப் பாருங்கள்? இவ்வளவு ஆதிக்கத்தையும், செல்வாக்கையும், ஜீவஉபாயத்தையும், மதங்கள் கோடான கோடி மக்களுக்கும் அளிப்பதென்றால் மதங்களை ஒழிப்பது லேசான காரியமாகுமா?
தூணிலும் இருப்பாரா?
தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று பிரகலாதன் சரித்திரமொன்றைக் கட்டி விட்டார்கள். இது சர்வ வியாபி என்ற கடவுளின் லட்சணத்தைக் குறிக்கும் கதையாகும். வான நூலின் படி பிரபஞ்சமெங்கும் வியாபித்துள்ளவை தூசும், தும்புமே. இதனைக் கடவுளென்பதில் அர்த்தமில்லை. ஆதலின், கண்டவரையில், கடவுள் சர்வ வியாபி என்று சொல்ல யாதொரு நியாயமுமில்லை. வேதாந்திகள் சொல்லும் சத்து, சித்து, ஆனந்தமும் பிரபஞ்சத்தில் காணோம்.
மருளா? மயக்கமா?
5.10.2006 -ம் தேதியிட்ட தினத்தந்தியில் தேர்தலில் வெற்றி பெற பில்லி சூன்யம் வைத்ததாகச் செய்தி வந்துள்ளது. விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறியும், நம்மூர் பக்கம் அந்த ஞானம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை என்பதை இச்செய்தி நமக்கு உணர்த்துகிறது. போன நூற்றாண்டில் இந்த மூட நம்பிக்கையை எதிர்த்து முதலில் போர்க் கொடி உயர்த்தியவர் சிங்காரவேலர். அரது கட்டுரையை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
