Category: அரசியல்
கீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி
அதிகார மேலாதிக்கத்தில் விரிசல் ஏற்படுத்தி பொருளாதார ரீதியான முன்னேற்றம் சற்றே கிடைத்தால், அது வாழ்வியலின் இதர அம்சங்களிலும் மாற்றம் காண்பதற்கான களச்சூழலை ஏற்படுத்தும் என்பது கீழத்தஞ்சையில் நிரூபணமாயிற்று. அதில் செங்கொடி இயக்கத்தின் பங்களிப்பு உன்னதமானது.
கீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் !
இரா. சிந்தன் கீழ் வெண்மணியில் நிகழ்த்தப்பட்டபடுகொலைகள், தனித்த சம்பவம் அல்ல. அது கீழத் தஞ்சையில் (இப்போதைய நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில்) கூர்மையடைந்திருந்த வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடே. பிரிட்டிஷ் காலனியாதிக்க காலமாக இருந்தாலும், இந்திய விடுதலைக்கு பிறகான சூழலிலும், மாநிலத்தில் ஆட்சி மாறிய பின்னணியிலும், தொடரும் வர்க்கப் போராட்டத்தின் உக்கிரத்தை வெளிக்காட்டும் நிகழ்வுகளில் ஒன்றே கீழ்வெண்மணி தியாகம் ஆகும். பிரிட்டிஷ் ஆதிக்க காலம் : அப்போதைய தஞ்சாவூர் இந்திய அரிசி உற்பத்தியில் சுமார் 30 சதவீதத்தை கொடுத்து வந்தது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



