Category: அரசியல்
திமுக ஆட்சியும் இடதுசாரிகளின் பணியும்
எஸ். கண்ணன் இந்திய நிர்வாகத்தில் தன்னாட்சி அமைப்புகளாக இருந்துவந்த நீதித்துறை, தேர்தல் ஆணையம், சி.பி.ஐ, வரலாற்று ஆய்வு உள்ளிட்டவைகளை வகுப்புவாத அபாயம் நிறைந்த இந்துத்துவா அமைப்புகளின் கைப்பாவையாக இயக்கும் பணியை பாஜக ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். மாநிலங்களின் ஒன்றியம்தான் இந்தியா என்பதை மறந்து, சர்வ அதிகாரம் கொண்ட அரசாக மத்திய பாஜக ஆட்சி தன்னை முன்னிறுத்துவதை காணமுடிகிறது. இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள மாநிலங்களுக்கான உரிமைகளை அபகரிக்கும் அனைத்து பணிகளிலும் ஆர்.எஸ்.எஸ் கொள்கை அமலாக்கம் என்ற முறையில்
தோழர் ஆர்.பி.முரே : ஒடுக்குமுறைகளுக்கு எதிரான புரட்சிகரக் குரல்
சுபாஷிணி அலி மே 12ஆம் தேதி தோழர் ஆர்பி முரேயின் நினைவுதினம். 1972இல் அவர் இறந்த போது மகாராஷ்டிரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தார். அப்போது அவருக்கு நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மட்டுமல்லாது, அம்பேத்கரிய இயக்கத்தின் தலைவர்கள் ஞான்ஷியாம் தல்வாட்கர், பாஸ்கர் கேத்ரேகர் மற்றும் பலரும் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்திற்கு டாக்டர் அம்பேத்கரின் மகன் யஷ்வந்த்ராவ் அம்பேத்கர் அவர்கள் தலைமை தாங்கினார். அம்பேத்கரியர்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையிலான
மார்க்சீய -லெனினியத்தில் தத்துவமும் நடைமுறையும்: சில குறிப்புகள்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் கார்ல் மார்க்சும் எங்கெல்சும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கிய மார்க்சீயத்தை மேலும் செழுமைப்படுத்தி, சமகாலப்படுத்தினார் தோழர் லெனின். மார்க்சீயம் சமகாலத்தில் மார்க்சீய- லெனினியமாகவே பொது உடமை இயக்கத்தில் கருதப்படுகிறது. பொது உடமை இயக்கங்களை நிராகரிக்கும் பல ஆய்வாளர்களும் அறிவுஜீவிகளும் மார்க்சீயத்தையும் லெனினியத்தையும் வேறுபடுத்திப் பார்க்கின்றனர். இவர்களில் சிலர் மார்க்சீயத்தை அங்கீகரிப்பதாகவும், ஆனால் லெனினியத்தை நிராகரிப்பதாகவும் பிரகடனம் செய்கின்றனர். வேறு சிலர், லெனினியம் என்பது ஜார் கால ரஷ்யாவிற்கு, அன்று நிலவிய சர்வாதிகார ஆட்சியை
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
