Category: அரசியல்
மெரினா எழுச்சியை பின் நவீனத்துவமுறை போராட்டம் என மதிப்பிடுகிறார்களே அது சரியா?
ஜனநாயக எழுச்சியின் பகுதியாகப் பார்க்கப்பட வேண்டிய பிரதேசக் கோரிக்கைகள், மொழிப்போராட்டங்களை தீவிர அடையாள அரசியல் எல்லைக்குக் கொண்டு சென்றது ஆட்சியாளர்களின் பொருளாதாரக் கொள்கையும் இந்தியாவைப்பற்றிய கண்ணோட்டமும்தான்.
21-ம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டம் எத்தன்மையுடையதாய் இருக்கும் ?
மனிதனை மனிதன் சுரண்டாத, ஒரு நாடு மற்றொரு நாட்டை சுரண்டாத அமைப்பிற்காக நடத்தும்போராட்டமாக அது இருக்க வேண்டும். மக்களின் குடியுரிமை, ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்தி, அந்த அமைப்பு முதலாளித்துவத்தை விட மேன்மையானது என்று நிலை நாட்டப்பட வேண்டும்.
மக்கள் மேம்பாட்டிற்கான கொள்கைவழியில் கேரளா…
தற்காலிகத் தீர்வுகளைத் தருவது மட்டுமே அரசின் கடமையாக இருக்க முடியாது, மாற்றுகளுக்கான முன்முயற்சிகள் துவக்கப்பட வேண்டும். 1990களுக்கு முந்தைய காலப் புரிதல் போல, மாநில அரசு ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கருவி என்பதை புரியச் செய்யும் வகையிலும், மக்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு வெறும் வலி நிவாரணிகளை மட்டுமே தந்து கொண்டிருக்க முடியாது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



