Category: ஆளுமைகள்
பண்ணை அடிமையை எதிர்த்த போராட்டத்தில் பி.எஸ்.தனுஷ்கோடி
1964ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது பி.எஸ்.தனுஷ்கோடி இதரபல தோழர்களுடன் வெளியேறிவந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதில் முழு மூச்சுடன் செயலாற்றினார். அந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் மார்க்சிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது பி.எஸ்.தனுஷ்கோடியும் கைது செய்யப்பட்டார். சுமார் ஒன்னறை ஆண்டுக்காலம் அவர் கடலூர் சிறையில் பாதுகாப்பு கைதியாக வைக்கப்பட்டார். 1975ம் ஆண்டில் அவசர நிலை பிரகடனத்தின் போதும் பி.எஸ்.தனுஷ்கோடி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரது வாழ்வில் 9 ஆண்டுகள் 9மாதம் சிறைவாசம் அனுபவித்தார். ஓராண்டுகாலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தியுள்ளார். தமிழகத்தில் அதிக காலம் சிறைவாசம் அனுபவித்த தலைவர் பிஎஸ்.தனுஷ்கோடி.
மார்க்ஸ் 200: உபரிமதிப்பும், அன்னியமாதலும் …
மார்க்சின் புரட்சிகரத் திட்டத்திற்கும் பொருந்துகிற உண்மை இது. முதலாளித்துவத்தின் முழுமையை, ஏகாதிபத்தியத்தையும் உள்ளடக்கி நாம் காணும்போதுதான் புரட்சிக்கான வாய்ப்புகளும், சாத்தியங்களும் மிகவும் அதிகமாகின்றன; வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர் வர்க்க புரட்சியைப்பற்றி மட்டும் நாம் பேசாமல் முதலாளித்துவ வளர்ச்சி குன்றிய நாடுகளிலும் தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியின் அடிப்படையில் ஜனநாயக புரட்சியை, சோசலிசம் நோக்கிய கட்டமாக வகுத்தெடுக்க முடிந்துள்ளது. தொழிலாளர் – விவசாயிகள் ஒற்றுமை என்ற கருதுகோளை லெனின் முன்வைத்ததற்கான பின்புலமாக, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான புரட்சியை, தாமதமாக தான் அடியெடுத்து வைத்த நாடுகளில் முதலாளித்துவத்தால் நிறைவேற்ற முடியாத இயலாமையே இருக்கிறது.
கார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் !
பல்வேறு அரசியல் பிரச்சனைகளில் வலுவான பிரச்சாரமும் செய்ய வேண்டும்.
தொழிற்சங்கங்கள் ஜனநாயக போராட்டங் களில் தலையிடுவதும் விவசாய இயக்கங்களுடன் வர்க்க ஒற்றுமையை உருவாக்குவதையும் உத்தர வாதம் செய்ய வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



