Category: இதழ் பெட்டகம்
உலக தொழிலாளர் இயக்கங்கள் – முன்னேற்றங்களும், சவால்களும்
உலக தொழிலாளர் இயக்கங்களில் தற்போது சோர்வும், தேக்கமும் ஏற்பட்டுள்ளது என்ற கருத்தினை பல முதலாளித்துவப் பத்திரிக்கைகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு முதலாளித்துவ அறிவு ஜீவிகளும் சளைக்காமல் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்.சின் தாக்குதல்
முகமது அலி ஜின்னா ஒரு மதச்சார்பின்மைவாதி என்று லால் கிருஷ்ண அத்வானி மதிப்பிட்டார். அந்தக்கூற்று வரலாற்று ரீதியாகத் துல்லியமானதா இல்லையா என்பது, இந்து வகுப்புவாத அரசியலின் எதிர்காலத்திற்கும் அத்வானியின் சொந்த தத்துவார்த்த நிலையெடுப்பிற்கும் அந்தக் கூற்றுக்கும் இருக்கும் சம்பந்தத்தை விட முக்கியமானதல்ல. இத்துணைக் கண்டத்தின் இருபதாம் நூற்றாண்டு அரசியலில் ஜின்னாவின் பங்கு குறித்த முழுமையான மதிப்பீடாக அத்வானியின் பாகிஸ்தான் பேச்சு இருக்கவில்லை என்பது கண்கூடு.
பண்டைய பண்பாடும் ஆய்வுகளும்
இன்று, நாம் எத்தகைய பண்பாட்டை இளைய சமூகம் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். விடுதலைக்கு பிறகு ஏற்பட்ட மொழி வழி மாநிலங்களுக்கான போராட்டமும், மொழி குறித்த பாதுகாப்புணர்வும், தமிழ் பற்றுருதியும் எண்ணற்ற ஆய்வு நூல்கள் வெளிவர காரணமாக அமைந்தன தமிழ் பற்றால் தமிழ் மொழி, அதன் தொன்மை, அதன் இலக்கிய, இலக்கண வளம் குறித்த ஆய்வுகளின் வெளிப்பாடாக தமிழ் சமுதாயம் குறித்த உயரிய மதிப்பீடுகளும் உருவாக்கப்பட்டன. இம்மதிப்பீட்டால் சங்க காலம், பொற்காலமென பறைசாற்றப் பட்டது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
