Category: இதழ் பெட்டகம்
கடவுள் சிருஷ்டியா?
தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் தோழர் ம.சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டில் தலைமையேற்றவர்; கான்பூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்; விஞ்ஞானப் பார்வையை தமிழ்மக்கள் பெறுவதற்காக ஏராளமான கட்டுரைகளை சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே எழுதியவர். புராணங்களையும், இதிகாசங்களையும் விமர்சித்தால் போதாது, விஞ்ஞான பார்வை மக்கள் பெறும்போதுதான் அறியாமை இருள் அகலும் என்று உறுதி காட்டியவர்; 71 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய கட்டுரையை மார்க்சிஸ்ட் வாசகர்களுக்கு அளிக்கிறோம்.
குடியரசின் பலன்களை ஒன்று திரட்டப் போராடுவோம்!
பூரண சுதந்திரம் என்ற குறிக்கோளை பல ஆண்டுகளாக ஏற்க மறுத்த காங்கிரஸ், கடைசியில் 1929 டிசம்பரில் நடந்த லாகூர் காங்கிரசில் அதை ஏற்று ஆண்டுதோறும் ஜனவரி 26 ஐ சுந்திர தினமாகக் கொண்டாடத் தீர்மானித்தது. ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத் தளைகளைத் துண்டித்தால் மட்டும் போதாது என்பதை மக்கள் உணர்ந்திருந்தனர். காலங்காலமாக இங்கு நீடித்து வரும் பசி, சுரண்டல் ஒடுக்குமுறைத் தளைகளிலிருந்து இந்திய மக்கள் விடுபடுவது தான் முக்கியமானது என்று அவர்கள் உணர்ந்திருந்தனர். இந்த விழிப்புணர்வு நாடெங்கிலும் எண்ணிலடங்கா வழிகளில் பிரதிபலித்தது.
இடதுசாரி கட்சிகளின் குணாம்சங்கள்!
2004 ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் பயனாக ஒரு கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அதற்கு தலைமை தாங்கும் பொறுப்பு காங்கிரஸ் மீது விழுந்தது. இது ஒரு விசேஷமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கியது. அதிலும் குறிப்பாக இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு கூட்டு மந்திரி சபைக்கு அவசியம் தேவை என்ற நிலைமை ஏற்பட்டது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

