Category: கேள்வி – பதில்
இடது ஜனநாயக அணி பற்றி ஜலந்தர் மாநாடு குறிப்பிட்டதற்கும், தற்போது குறிப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்?
அன்றைக்கு ஒரு வடிவத்தில் முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தது என்றால், இன்றைக்கு அது வேறு பல வடிவங்களில் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அன்று ஆளும் வர்க்கத்துக்குத் தேவை என்ற அடிப்படையில் காங்கிரசின் சர்வாதிகாரம் கோலோச்சியது என்றால், இன்றைக்கு அதே அடிப்படையில் பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்குகளும், கூடுதலாக மத வெறி நடவடிக்கைகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
அண்ணல் அம்பேத்கர் பிறந்த 125 வது ஆண்டு சிறப்பு விவாதத்திற்கான கோரிக்கை ஏன் எழுப்பப்படுகிறது?
இந்திய சாதி அமைப்பு இன்னும் ஏன் தொடர்கிறது? சிலர் இதுவொரு நிலப்பிரபுத்துவ தொடர்ச்சி, நிலப்பிரபுத்துவ சிந்தனை என்பார்கள். அப்படியல்ல; நாம் இந்திய முதலாளித்துவம் தன்னை வளர்த்துக் கொள்ளும்போது அத்துடன் நிலப்பிரபுத்துவ சிந்தனைகளை வைத்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல; தலித் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கு, அது சாதியை தன்னுடைய கருவியாக பயன்படுத்திக் கொள்கிறது.
ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை காலவரிசையில் விளக்க முடியுமா?
ரஷ்யா ஜார் மன்னர்களின் ஆட்சியில் நீண்டகாலம் இருந்தது. இரண்டாம் அலெக்சாண்டரின் காலத்தில் தொழில்மய நடவடிக்கைகள் தீவிரமாகின. அதே காலகட்டத்தில் முடியாட்சிக்கு எதிராக, அரசியல் அமைப்பில் மாற்றங்கள் வேண்டிய போராட்டங்கள் அதிகரித்து வந்தன. அப்போது, புனித பீட்டர்பெர்க் நகரத்தின் வீதிகளில், அதிதீவிர அரசு எதிர்ப்புக் குழுவின் குண்டுவீச்சில் ஜார் அலெக்சாண்டர் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவருடைய மகன் மூன்றாம் அலெக்சாண்டருக்கு முடிசூட்டப்பட்டது. மூன்றாம் அலெக்சாண்டரின் ஆட்சி முன்னதை விடவும் பிற்போக்குத்தனமானதாக அமைந்தது. 1894 இல் – மூன்றாம் அலெக்சாண்டர்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



