Category: வரலாறு
காஸ்ட்ரோவும் – புரட்சியும்!
அமெரிக்கர்களால் இந்த புரட்சிகர நடவடிக்கை யினை அழித்துவிட முடியாது; ஏனெனில் எம் தேச மக்கள் ஆயுதந்தாங்க பயிற்சி பெற்றவர்கள். ஆனால், எங்கள் தவறுகளை நாங்கள் திருத்திக்கொள்ள முடியாமல் போனால், இந்நாடு தன்னைத்தானே அழித்துக்கொள்ள முடியும். இந்தக் காரணத்திற் காகத்தான், நாங்கள் முழுமையான சமூக மாற்றத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
குடியரசின் மாண்புகளைப் பாதுகாப்போம்! மக்கள் நலன்களை முன்னேற்றுவோம்!
1950ல் குடியரசு அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டது சுதந்திர இந்தியாவின் முக்கியமான சாதனையாகும், ஐம்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன், அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை தனது குடிமக்களுக்கு ஜாதி, மத, இன, பால் பேதமின்றி சம உரிமை அளிக்கும் ஜனநாயகக் குடியரசாக அறிவித்தது. இப்போது நினைத்துப் பார்த்தால், வயது வந்தோருக்கான வாக்குரிமையுடன் கூடிய பாராளுமன்ற ஜனநாயக முறையை உருவாக்கிய அரசிய லமைப்புச் சட்டம் மிகப் பெரிய சாதனைதான் என்று தெரிகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் சொல் அமைப்பிலும், செயல்படும் முறைகளிலும், பல தடைகளும் எல்லைகளும் கொண்டதாக இருந்தாலும் கூட, சாமானியனும் அரசியலில் ஈடுபட அது வழி வகுத்தது.
ஏழைகளின் நெஞ்சம் கவர்ந்த தளபதி ஏ.கே.ஜி!
ஏ.கே.ஜி எனும் மூன்று எழுத்துக்களால் நாடெங்கிலும் அறியப்பட்டவர் – ஆயில்லியத்து குற்றியேரி கோபாலன் எனும் ஏ.கே.கோபாலன். ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து, எதேச்சதிகாரப் பாதையில் பயணித்த அவசர கால ஆட்சியை மக்கள் தூக்கியெறியும் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கையில், 1977 மார்ச் 22 அன்று ஏ.கே.ஜி. மறைந்தார்! மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

