Category: செவ்வியல் நூல்கள் அறிமுகம்
காவல் கோட்டம் விருதுக்கான படைப்பே!!
இலக்கியத்திற்கான விருதுகள் பல வழங்கப்பட்டாலும், இந்திய அரசின் சாகித்திய அகாடமி அளிக்கும் விருது மிக உயரியதாகக் கருதப்படுகிறது. 1955 ல் இருந்து 56 ஆண்டுகளாக தமிழ் இலக்கியப் படைபாளிகள் இவ்விருதினைப் பெற்று வருகின்றனர். 1957, 59, 60, 64 76 ஆகிய ஐந்தாண்டுகளை விடுத்து, எஞ்சிய 51 ஆண்டு களில் தமிழின் சிறந்த படைப்பாளர்கள் கௌர விக்கப்பட்டுள்ளனர். கல்கி கிருஷ்ணமூர்த்தி தன் அலை ஓசைக்காகவும், ராஜாஜி தன் சக்கரவர்த்தி திருமகனுக்காகவும், அகிலன் வேங்கையின் மைந்தனுக்காகவும், பிசிராந்தையார் நாடகம்
நூல் அறிமுகம்: தோல்
ஒவ்வொரு பகுதியிலும் தொழிலாளி வர்க்கம் என்னென்ன இன்னல்களுக்கு ஆளாகி இருந்தது, அதிலிருந்து எங்ஙனம் படிப்படியாக மீண்டது என்பதையெல்லாம் தமிழக படைப்பாளிகள் வெளிப்படுத்துவது தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு பேருதவியாக அமையும். சோவியத் எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கியின் வழி நின்று எழுதத் தொடங்கிய தோழர். செல்வராஜ் தனது பணியை திறம்பட நிறைவேற்றியுள்ளார். எழுத்தாளர் என்ற முறையில் அவருக்கும், வெளியிட்ட என்.சி.பி.ஹெச் நிறுவனத்தாருக்கும் நமது வாழ்த்துக்கள்.
கார்ல் மார்க்சின் ‘கூலி உழைப்பும் மூலதனமும்’
1849 இல் மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்கள் இன்றும் பொருந்துமென்றால் அவை காலத்தை வென்றவையல்லவா? ‘கூலி உழைப்பும் மூலதனமும்’ என்ற நூலின் இன்னொரு சிறப்பு மாமேதை மார்க்ஸ் தத்துவராக மட்டுமல்ல, சாதாரணத் தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு தினசரிப் பத்திரிக்கையில் இந்நூலை எழுதினார் என்பதும் தான்!
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
