Author: Editorial
வழிகாட்டும் கேரளம் : கூட்டுறவின் மூலம் ஒரு மாற்று !
ஆசிக் அலி, அங்சுமன் சர்மா (ஜாகோபின் இதழில்வெளியான ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) இந்திய பொருளாதாரத்தினை, நவ-தாராளமய திசை வழியில், செலுத்திய கடந்த 30 ஆண்டுகளில் வேளாண் சமூகங்களும், ஊரக ஏழைகளும் அதன் கடுமையான உடன் விளைவுகளை எதிர்கொண்டுவருகிறார்கள். நமது நாட்டை ஆளும் கோமான்கள், தாராள வர்த்தக கொள்கைகளை திணித்ததுடன், வேளாண்துறைக்கான அரசு செலவினங்களையும்,மனியங்களையும் குறைத்தார்கள் மேலும் பொதுக் கொள்முதல் அமைப்பை பலவீனப்படுத்தியுள்ளார்கள். வேளாண் வர்த்தகத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், இடுபொருட்களின் விலைகளையும், விளைபொருட்களின் விலைகளையும் தீர்மானிப்பதுடன் ஒட்டுமொத்த
காலத்தின் தேவையே பகத்சிங்கை வளர்ந்தெடுத்தது
வரலாற்றை தனிநபர்கள் படைப்பதில்லை; ஆனால் வரலாற்றில் தனிநபர்கள் வகிக்கும் பங்கு முக்கியமானதாகும். வரலாற்றைத் தனிநபர்கள் படைக்கிறார்கள் என்பது முதலாளித்துவ சிந்தனை போக்காகும். அத்தகைய முதலாளித்துவ கல்வி முறைதான் இந்திய விடுதலை உள்ளிட்ட எல்லா வரலாறுகளையும் யாரோ ஒருவர் சாதித்தது போல் கட்டமைத்துள்ளது. உண்மையில் வரலாற்றை மக்களே படைக்கிறார்கள். உலகில் நடைபெற்ற அத்துணை சமூக மாற்றங்களும் மக்களால் படைக்கப்பட்டதே அன்றி தனிநபர்களால் அல்ல என்பதை மக்கள் வரலாறு சொல்லுகிறது. மார்க்சியம் மக்களின் வரலாற்றைப் பேசுகிறது. பகத்சிங்கும் அதையே கூறுகிறார்.
ஒரு புரட்சிகரக் கட்சிக்கான உறுப்பினர்களின் தரம் !
கட்சி உறுப்பினர்களின் தரத்தைக் கணக்கில் கொள்ளாமல் கட்சி உறுப்பினர் எண்ணிக்கையில் ஏற்படும் அதிகரிப்பை மட்டும் கணக்கிட்டு, அதுதான் கட்சி விரிவாக்கம் என்று விளக்கிவிட முடியாது. கட்சி உறுப்பினர்களின் அரசியல், ஸ்தாபன உணர்வு மட்டத்தை உயர்த்துவதும், உறுப்பினர் தரத்தை உயர்த்துவதுமே முக்கியமான கடமையாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
