Author: Editorial
கம்யூனிஸ்ட்டுகளும் கருத்துப் போராட்டமும் – III
மகத்தான ரஷ்யப்புரட்சி உலக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இந்தப் புரட்சியின் வரலாற்று குறித்தோ அல்லது அந்தக்கட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்தோ விளக்கமாக எடுத்துரைப்பது இந்தக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆயினும், அத்தகையதொரு ஆழமான பரிசீலனையானது பெரும் படிப்பினைகளை அளிக்கக் கூடியவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த காலக்கட்டத்தில் கொந்தளிப்பான நிகழ்வுகளின் போக்கில் எவ்வாறு கருத்துப் போராட்டங்கள் பெரியதோர் பங்கினை அளித்தது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அதில் முக்கியமான கருத்து மோதல்களைப் பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
வெனிசுலாவில் நிலச் சீர்திருத்தம்!
வெனிசுலா நாட்டு கிராமப் புறங்களிலே பிரபுத்துவ பண்ணை முறையை எதிர்த்துப் போர்ப் பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே அரசு ஆதரவுடன் நிலச் சீர்திருத்தங்கள் தற்போது அமலாகி வரும் நாடு வெனிசுலா மட்டுமேயாகும். பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஏராளமான தரிசாகக் கிடக்கும் தனியார் பண்ணை நிலங்களை உற்பத்தியில் ஈடுபடுத்தும் இயக்கம் நிலச் சீர்திருத்தத்தின் முக்கியமானதொரு அம்சமாகும். மேலும் ஒட்டுமொத்த கிராமப்புற வளர்ச்சிக்கு அடிப்படையான உணவில் தன்னிறைவு பெறவும், வேளாண்மை லாபகரமாக இருக்கவும் தேவையான வகையில் நிலம் மற்றும் நீர் பயன்பாட்டை மாற்றி அமைத்தல் என்பது வேளாண் சீரமைப்புக் கொள்கையில் உள்ளடங்கிய அம்சங்களாகும். வேளாண் துறையில் மாற்றங்களை நிர்வகிக்கவும், தொழில் நுட்ப மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் தேவையான புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நில உடமையில் கூட்டுறவு அமைப்பை உருவாக்குவது என்பது தற்போதைய கொள்கையின் அடிப்படை அம்சமாகும்.
வடகொரியாவின் அணுச்சோதனை!
பலமிக்க அமெரிக்காவின் ராணுவத்தளம் மற்றும் ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் சுற்றி வளைத்து பொருளாதார, ராணுவ தாக்குதல் நடத்துகிற சூழல் வடகொரியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இதனால், கடந்த அக்டோபர் 9 ம் தேதியன்று வடகொரியா அணுச் சோதனையை நடத்தியது. இந்தச் சோதனை உலகின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


