விடுதலை75: நவீன இந்தியாவின் அடிப்படைகளைக் காப்போம் !
இந்தியா ஒரு நவீன தேசமாக உருவானது. நம்மைப் பொறுத்தவரை இந்திய தேசியமானது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நாம் நடத்திய போராட்டத்தின் விளை பொருளே ஆகும். ஆங்கிலேயர்கள் இங்கே வருவதற்கு முன் இந்தியா ஒரு தேசமாக இருக்கவில்லை. சாம்ராஜ்ஜியங்களாக, பேரரசுகளாக, சிறு-குறு நில மன்னர்களின் ஆட்சிப் பகுதிகளாகவே அது இருந்தது. ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தில்தான் இது ஒரு தேசமாக உருவெடுத்தது என்பதை புரிந்து கொள்வது அவசியமாகும்.
ஏ.நல்லசிவன் நூற்றாண்டு : போராட்ட வாழ்க்கை தரும் பாடம் !
வர்க்க-வெகுஜன அமைப்புகளை வளர்த்திடாமல் கட்சியை பலப்படுத்திட முடியாது என்று அவர் அடிக்கடி குறிப்பிடுவார். கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வர்க்க-வெகுஜன அமைப்பில் வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவார். செய்ய வேண்டியது என்ன? நூலில் இருந்து பல அம்சங்களை தோழர் ஏ.என். அடிக்கடி மேற்கோள் காட்டுவார். பின்தங்கிய உழைப்பாளி மக்களை வர்க்க-வெகுஜன அமைப்புகளில் சேர்த்து, அவர்களுடைய கோரிக்கைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்க வைத்து, அதனூடே கம்யூனிசக் கொள்கையை அவர்களுக்குப் பயிற்றுவித்து அவர்களைக் கட்சிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை தனது அனுபவத்தில் இருந்து சுட்டிக்காட்டுவார்.
இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல…
வரலாற்று ரீதியாக ஒரு நிறுவனரால் தொடங்கப்பட்டு அதன் பிறகு ஒரு நேர்க்கோட்டு வகையில் உருவான ஆபிரஹாமிய வகைப்பட்ட மதங்களில் இருந்து (அதாவது யூத மதம், கிறித்துவம், இஸ்லாம் ஆகியவை ஆபிரஹாம் என்பவரின் வம்சாவழியாக வந்தது என்ற கருத்தை வலியுறுத்துவது) முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இந்து மதம் இருந்து வந்தது என்பதை நாம் இங்கு அங்கீகரிக்க வேண்டியது அவசியம். இந்து மதத்தின் உள்ளார்ந்த அம்சமான பன்முகத் தன்மை மற்றும் பன்முக வாதம் ஆகியவற்றுக்குப் பதிலாக ஒற்றைக் கடவுள் வடிவத்தை அதற்குக் கொடுத்து, இந்துக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அனைவருக்கும் அதை ஒரே மாதிரியாக அமல்படுத்த முயற்சித்து வரும் இந்துத்துவா தத்துவத்தின் இந்த முயற்சியானது காலனிய வகைப்பட்ட சிந்தனை வடிவத்தை தொடர்ந்து பயன்படுத்தும் ஒரு முயற்சியே ஆகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
