Tag: அமெரிக்கா
ஈரானை சீண்டும் ஏகாதிபத்திய கொக்கரிப்பு : எத்தனை காலம் அமைதி நீடிக்கும்?
– பிரபீர் புர்கயஸ்தா இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர்நிறுத்தம் நீடிக்கிறதென்றால், ஈரானின் அணுசக்தி நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப் இனி தாக்குதல் போதும் என்று முடிவு செய்தால், இஸ்ரேல்-ஈரான் இடையிலான போரில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று தெரியக்கூடும். இப்போதும் காசாவில் இனப்படுகொலை தொடர்கிறது. அங்கு இரண்டு மில்லியன் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல் மரணத்தை வேகப்படுத்தும்; அல்லது பட்டினியால் மெல்ல மெல்ல சாகச் செய்யும். இந்த இரண்டு வாய்ப்புகள்தான் அந்த மக்கள் முன்னே உள்ளன. காசாவில் நடந்துவரும் இனப்படுகொலை தினமும்
அணு ஆயுத பரவலை அதிகப்படுத்தும் அமெரிக்க போர் வெறி!
– விஜய் பிரசாத் ஐக்கிய நாடுகள் நிறுவனம் நிறுவப்பட்ட சிறிது காலத்திற்குப் பிறகு, 1958இல் ஈரான் IAEA-வில் சேர்ந்தது. தொடர்ந்து அது IAEA-வின் உறுப்பினராக நீடிப்பதோடு, அமைதியான அணுசக்தி பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட விதிமுறைகளின் பொதுவான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருகிறது. ஈரானுக்கு எதிராகத் தடை விதிக்க வேண்டுமென புவிக்கோளத்தின் வடக்கு நாடுகள் (வளர்ச்சியடைந்த நாடுகள்) IAEA மீது மிகுந்த அழுத்தம் கொடுத்த போதிலும், ஈரான் விதிமுறைகளை மீறவில்லை; அது ஓர் அணு ஆயுத நாடு அல்ல என்பதை IAEA
இன்றைய ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள்
பேரா. பிரபாத் பட்நாயக் அண்மைக் காலமாக இன்றைய ஏகாதிபத்தியத்திற்குள் தோன்றியுள்ள முரண்களுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் விசித்திரமான நடவடிக்கைதான் காரணம் என்று, பொதுவாக தாராளவாதிகளின் வட்டாரத்தில் குற்றம் சாட்டப்படுகிறது. அவர் தான்தோன்றித்தனமாக, பீங்கான் கடைக்குள் புகுந்ததொரு முரட்டுக் காளையாக செயல்படுவதன் மூலம், ஏகாதிபத்திய முகாமில் முன்பு நிலவி வந்த ஒற்றுமையை நொறுங்கச் செய்தார் என்றனர். இந்த பகுப்பாய்வு மிகவும் மேலோட்டமான ஒன்றே ஆகும். அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஐரோப்பிய பொருட்களுக்கான சுங்க வரி என்பது டிரம்ப்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
