Tag: கட்சி மாநாடு
தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இடது ஜனநாயக மாற்றை உருவாக்குவோம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24 வது தமிழ்நாடு மாநில மாநாட்டு அறைகூவல் தமிழகத்தில், தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாற்று பாலினத்தவர் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு இடதுசாரி கொள்கைகளே சரியான மாற்றாக அமைய முடியும். சமூகத்தின் மேல்தட்டில் இருக்கும் ஒரு சிறு கூட்டத்தினர் நலன்களை பாதுகாக்கின்ற கொள்கைகளை அகற்றி, உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளை கொண்ட இடதுசாரி மாற்று தமிழகத்தில்
கம்யூனிஸ்ட் கட்சியில் மாநாடுகளின் முக்கியத்துவம்
உ. வாசுகி பொதுவாக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஸ்தாபன கட்டமைப்பில் மாநாடுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. அந்தந்த மட்டத்தில் மாநாடே உயர்ந்த பட்ச அமைப்பாகும். அனைத்து அதிகாரங்களும் மாநாட்டுக்கு உண்டு. குறிப்பாக, கட்சிக் காங்கிரஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மாநாட்டுக்கு அதிகபட்ச அதிகாரம் உள்ளது. அமைப்பு விதிகள் திருத்தம், பொதுச் செயலாளர், மத்திய குழு, அரசியல் தலைமை குழு தேர்வு என்பதோடு, கடந்த மாநாட்டின் அரசியல் நடைமுறை உத்தி பரிசீலிக்கப்பட்டு, வரும் 3 ஆண்டுகளுக்கான அரசியல் திசை
மார்க்சிஸ்ட் கட்சியும், மதுரை மாநாடுகளும் !
இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் மிகச்சரியான மார்க்சிய – லெனினியப் பாதையில் செல்கிறது; ஆகவேதான் அதிதீவிர இடதுசாரிகளும் வலதுசாரிகளும் சேர்ந்து நமது கட்சியைத் தாக்குகிறார்கள்; எத்தனை தாக்குதல்கள் வந்த போதிலும் நமது கட்சி நமது சொந்த வர்க்கத்திற்கும் மக்களுக்கும் தொடர்ந்து விசுவாசமாக பணியாற்றும்; நமது நாட்டின் திட்டவட்டமான சூழ்நிலைமைகளை ஆய்வு செய்து அதற்கு ஏற்ற விதத்தில் மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளை அமலாக்கும் என்று அத்தீர்மானம் அறைகூவல் விடுத்தது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

