Tag: கட்சி
திராவிடக் கருத்தியல் எந்த நிலையில் உள்ளது?
கேள்வி: திராவிட அரசியல் கட்சிகள் பிராந்திய முதலாளிகளின் நலன்களை பிரதிபலிக்கின்றனவா? அவர்களிடம் தற்போது திராவிடக் கருத்தியல் எந்த நிலையில் உள்ளது? டி.கே.ரங்கராஜன் : குறிப்பிட்ட கருத்தியல் என்பது குறிப்பிட்ட காலச் சூழலில் உருவாகிறது. அந்த காலம், தேவை மாற்றம் பெற்று, முடிவடைகின்றபோது வேறு சில கருத்துக்கள் சமூக முரண்பாடுகள் அடிப்படையில் உரு வாகின்றன. வரலாற்றில் ஒரு கருத்தியல் என்றைக்கும் அதே நிலையில் உயிருடன் இருக்க வேண்டுமென்ற அவசியம் இருப்பதில்லை. திராவிட இயக்கம் தோன்றிய காலத்தின் அரசியல், பொருளாதாரச்
2வது மாநாட்டு முடிவுகளும் அரசியல் போராட்டங்களும்
இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநாடாக அமைந்த இரண்டாவது காங்கிரசில் விவாதிக்கப் பட்ட விஷயங்கள் விளக்கமாக எடுத்துரைக்க இங்கு வாய்ப் பில்லை. சுருங்கக் கூறின் மாநாட்டின் முக்கிய ஆவணமாக, ஆழமான விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்ட பொருள், ‘கட்சியின் அரசியல் நிலைபாட்டின் அடிப்படைகள்’ என்ற ஆவணமாகும். (ஆங்கிலத்தில் பொலிட்டிக்கல் தீசிஸ்) என்று அழைக்கப்படும் இந்த ஆவணம் கல்கத்தா ‘தீசீஸ்’ என்ற பெயரில் பிற்காலத்தில் பிரபலமாயிற்று. இரண்டாவதாக, முந்தைய காலகட்டத்தில் கட்சி பின்பற்றிய அரசியல் நிலைபாடுகள் அடிப்படையிலேயே ‘திருத்தல்வாத பார்வையை’
பண்பாட்டு உளவியல் நோக்கில் கட்சி
அ.குமரேசன் பண்பாடு என்றால் என்ன என்பது பற்றியே முழுமையான புரிதல் உருவாக்கப்பட்டிருக்கிறதா என்பது கேள்வி. `கல்ச்சர்’ என்பதை இங்கே சமஸ்கிருத வழியில் `கலாச்சாரம்’ என்றே இத்தனை ஆண்டுகளாக கூறிவந்திருக்கிறோம். கலாச்சாரம் என்றால் வெறும் கலை – இலக்கிய செயல்பாடுகள் மட்டுமே என்பதாகப் புரிந்துகொண்டு அதைப்பற்றி மட்டுமே பேசி வந்ததும் உண்டு. `பண்பாடு’ என்ற சொல்லையும் அதற்கு கிட்டத்தட்ட நெருக்கமான `வாழ்க்கை முறை’ என்ற பொருளையும் அண்மைக் காலமாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். `பண்பாட்டு உளவியல்’ என்பது இன்னும் ஆழமான
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

