Tag: கம்யூனிஸ்ட்
கட்சி அமைப்பின் அவசியம்!
நமது கட்சியின் அகில இந்திய 18வது மாநாடு நடத்திய கட்சி அமைப்பு பற்றிய பரிசீலனை அறிக்கையின் கோடிட்டு காட்ட வேண்டிய பகுதி என்று எங்களுக்கு பட்டதை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மக்கள் மனதை கவ்விப்பிடிக்கும் ஒர புரட்சிகரமான பாட்டாளி வர்க்க கட்சியாக நாம் உயர அயராது பாடுபட வேண்டியுள்ளது. இன்றைய பலகீனத்தை களைந்து, நாடு தழுவிய அளவில் நமது செயல் விரிவடைய வேண்டுமானால், திட்டமிட்ட செயல் பாடுகள் அவசியமாகிறது.
கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர் வர்க்கமும் VI
இத்தொடரின் முந்தைய கட்டுரைகளில் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பாத்திரத்தை பற்றி சற்று விளக்கமாக எழுதியிருந்தோம். இக்கட்டுரைகள் மூலம் தொழிற்சங்க பணிகள் செய்வதன் மூலம் மட்டும் தொழிலாளி வர்க்கத்தை ஒரு புரட்சிகரமான வர்க்கமாக வார்த்தெடுக்க முடியாது என்பதற்கான காரணங்களை அழுத்தம், திருத்தமாக விளக்கியிருந்தோம்.
லெனின் வாழ்வும் – சிந்தனையும்!
மாமேதை லெனின் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்துவிட்டன. இப்போதும் அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர் சொன்னதைக் கோடிட்டுக் காட்டியும், எழுதியும் வருகிறார்கள். அவைகளில் இப்போது ஒரு புதிய வரவு தோழர் அருணன் எழுதிய லெனின் – வாழ்வும் சிந்தனையும் என்பதாகும். அண்மையில்தான் இவர் மார்க்ஸ் பற்றி அரிய நூல் ஒன்று எழுதி முடித்தார். அடுத்து இப்போது லெனின் பற்றி 356 பக்கங்கள் கொண்ட நூல் எழுதியுள்ளார். வால்கா நிதி தீரத்தின் வசந்தம் என்ற தலைப்பில் ஆரம்பித்து, அவர் காலம் ஆனார் என்ற தலைப்பில் முடித்துள்ளார்! மொத்தம் 38 தலைப்புகள்!!
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
