Tag: கம்யூனிஸ்ட்
2வது மாநாட்டு முடிவுகளும் அரசியல் போராட்டங்களும்
இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநாடாக அமைந்த இரண்டாவது காங்கிரசில் விவாதிக்கப் பட்ட விஷயங்கள் விளக்கமாக எடுத்துரைக்க இங்கு வாய்ப் பில்லை. சுருங்கக் கூறின் மாநாட்டின் முக்கிய ஆவணமாக, ஆழமான விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்ட பொருள், ‘கட்சியின் அரசியல் நிலைபாட்டின் அடிப்படைகள்’ என்ற ஆவணமாகும். (ஆங்கிலத்தில் பொலிட்டிக்கல் தீசிஸ்) என்று அழைக்கப்படும் இந்த ஆவணம் கல்கத்தா ‘தீசீஸ்’ என்ற பெயரில் பிற்காலத்தில் பிரபலமாயிற்று. இரண்டாவதாக, முந்தைய காலகட்டத்தில் கட்சி பின்பற்றிய அரசியல் நிலைபாடுகள் அடிப்படையிலேயே ‘திருத்தல்வாத பார்வையை’
கம்யூனிஸ்ட்டுகளும் கருத்துப் போராட்டமும் – III
மகத்தான ரஷ்யப்புரட்சி உலக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இந்தப் புரட்சியின் வரலாற்று குறித்தோ அல்லது அந்தக்கட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்தோ விளக்கமாக எடுத்துரைப்பது இந்தக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆயினும், அத்தகையதொரு ஆழமான பரிசீலனையானது பெரும் படிப்பினைகளை அளிக்கக் கூடியவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த காலக்கட்டத்தில் கொந்தளிப்பான நிகழ்வுகளின் போக்கில் எவ்வாறு கருத்துப் போராட்டங்கள் பெரியதோர் பங்கினை அளித்தது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அதில் முக்கியமான கருத்து மோதல்களைப் பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
கம்யூனிஸ்ட்டுகளும் – கருத்துப் போராட்டமும் – II
சென்ற இதழில் (அக்டோபர் 2006) புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ள ஒரு முக்கிய அம்சத்தை சுட்டிக் காட்டி யிருந்தேன். உண்மையான மார்க்சிஸ்ட் கருத்துகளுக்கு மாறுபட்ட அல்லது தவறான கருத்துக்களை முன்வைத்த பலவிதமான சித்தாந்தப் போக்குகளை கூர்மையாக அந்த அறிக்கை விமர்சனம் செய்தது பற்றி குறிப்பிட்டிருந்தோம். கற்பனாவாத சோசலிசத்திற்கும், விஞ்ஞான சோசலிசத்திற்கும் உள்ள அடிப்படையான வேற்றுமை களை எவ்வாறு மார்க்சும் – ஏங்கெல்சும் விளக்கினார்கள்? என்பதைக் கண்டோம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
