Tag: கிராம முன்னேற்றம்
சி.டி. குரியன்: கிராமப்புற மக்களின் மேன்மைக்குக் குரலெழுப்பிய அறிஞர்
வீ. பா. கணேசன் 93 ஆண்டுகளை நிறைவுசெய்துவிட்டு, நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்ற பொருளாதார அறிஞரான சி.டி. குரியன் தன் வாழ்நாள் காலத்தில் செய்த சாதனைகள் எண்ணற்றவை. 1931ஆம் ஆண்டு ஜூலை 2 அன்று பிறந்த அவர், 1953ஆம் ஆண்டில் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். பின்பு, அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து 1962ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். 1962 முதல் 1978ஆம் ஆண்டு வரை சென்னை கிறித்துவக் கல்லூரியில் பொருளாதாரத்
இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அடிப்படைவாதிகள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா கண்டத்தில் பெரும் விவாதம் நடந்து கொண்டிருந்தது. அதாவது ஆரிய இனத்தில் பிறப்பவர் அறிவாளி என்றும், வேறு இனங்களில் பிறக்கும் குழந்தைக்கு அவ்வளவு மதிநுட்பம் இருப்பதில்லை என்றும் விவாதம் நடந்தது. அதேபோல் தான், உயர்கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதமானம் இட ஒதுக்கீடு என்கிற, மத்திய அரசின் முடிவுக்கு, எதிரான விவாதங்களும் நடைபெறுகிறது. தகுதி என்பது, அவரவர் வளருகிற சமூக சூழ்நிலையில் இருந்தே உருவாகிறது. பிறக்கும் போதே எல்லோரும் எல்லாத் தகுதிகளுடன் பிறப்பதில்லை. உலகமயமாக்கல் கொள்கையைப் பற்றி குறிப்பிடுகிறபோது, அடிப்படைவாதம் உலக மயமாக்கலோடு சமரசம் செய்து கொள்கிறது என்று சமீர் அமீன் குறிப்பிடுகிறார். இங்கே அடிப்படை வாதம் என்பது மத, சாதி மற்றும் இன ரீதியிலான ஆதிக்க மனப்பான்மை ஆகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
