Tag: செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவும் வேலைவாய்ப்பின் மீதான பாதிப்புகளும்
பேரா. பிரபாத் பட்நாயக்தமிழில்: மோசஸ் பிரபு எழுத்தாளர்களுக்கு மாற்றாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதை கண்டித்து கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஹாலிவுட் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். சில கட்டுப்பாடுகளை விதிப்பதாக வாக்குறுதி அளித்தபோது போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அவர்கள் எழுப்பிய அடிப்படையான பிரச்சனைகளுக்கு இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை. செயற்கை நுண்ணறிவு அறிமுகம் குறித்தும், அதன் நன்மை தீமைகள் குறித்தும், பல்வேறு கோணத்தில் பலர் எழுதியுள்ளனர். அது உண்டாக்கப்போகும் பெருவாரியான
செயற்கை நுண்ணறிவும் உழைக்கும் வர்க்கமும்
ஆதிகால மனிதனை உழைப்புதான் இன்றைய முன்னேறிய நிலைக்கு எடுத்துவந்துள்ளது. முன்னர் உழைப்பே அவர்களது பலமாகவும் அடுத்தடுத்த வளர்ச்சிக்கான அடித்தளமாகவும் அமைந்தது. வர்க்கங்களும் அதன் விளைவான சுரண்டலும் உருவான பிறகு, உழைப்பு என்பதன் பொருளும் மாற்றத்திற்கு ஆளாகியுள்ளது. சுரண்டலின் அளவு மேலும் மேலும் உச்சத்தைத் தொட்டுள்ள முதலாளித்துவ சமூகம், உழைப்பை விற்கும் நிலைக்கு மனிதர்களை தள்ளுகிறது. உழைப்பை அவரிடமிருந்து பிரித்து அவருக்குச் சொந்தமானதாக இல்லாமல் செய்கிறது. “அது உழைப்பை துன்பமளிப்பதாக, பலத்தைப் பலவீனமானதாக, வளமையை மலடாக” மாற்றுகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
