Tag: தமிழகம்
சோழர் காலம், யாருடைய பொற்காலம்?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ‘கலாச்சார தூதுவர்களாக’ பிராமணர்களை அனுப்பி, இறுக்கமானதொரு வர்ணாஸ்ரம தர்ம சமூக அமைப்பைச் சோழ மன்னர்கள் உருவாக்கினர். பன்னாட்டு வர்த்தகத்திற்கு மன்னர்களின் ஆதரவு தேவைப்பட்டதால், வணிகர்களும் மன்னருக்குத் தாராளமாக நிதி உதவியளித்து, இக்கூட்டில் இணைந்தனர்.
தமிழ்நாட்டு ஊரக வேளாண் குடும்பங்களின் நிலை என்ன?
கிராமப்புற வேளாண் குடும்பங்கள் கடன் வாங்காமல் இருப்பது என்பது எளிதான விஷயமல்ல. சாகுபடிக்கும் இதர சுய உற்பத்தி நடவடிக்கைகளுக்கும், குறிப்பாக அவ்வுற்பத்தியில் சந்தை சார் இடுபொருட்கள் தேவை என்கிறபொழுது கணிசமான சொந்த மூலதனம் அல்லது வேறு வருமான மூலங்கள் இருந்தாலொழிய கடன் வாங்காமல் வேளாண் மற்றும் வேளாண்சார் தொழில்கள் செய்வது கடினம்.
தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை தனியார்மயம் – உலகமயம் உணர்த்தும் பாடங்கள்
அ. இராசகோபால் இந்திய அரசின் சமீபத்திய அறிக்கையின்படி இந்தியாவில் 21 நகரங்களில் குடிநீருக்காக உபயோகிக்கப்படும் நிலத்தடி நீர் 2020-ல் முற்றிலும் குறைந்து பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதில் சென்னையும் அடங்கும். 2020-ல் இந்தியாவில் தேவைப்படும் குடிநீர் அளவு இரட்டிப்பாகி பல கோடி மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த வருமானத்தில் ஆறு சதவீதம் இழப்பு ஏற்படும். ( நிதி ஆயோக்- ஜூன் 2018). சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் எங்கும் ஏற்பட்டுள்ள கடும்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

