Tag: தொழிற்சங்கம்
தொழிலாளர் ஒற்றுமையை உயர்த்திப்பிடிக்கும் சின்னியம்பாளையம்!
எங்கள் நால்வரை அழித்து விட்டால் செங்கொடியை, கம்யூனிச கருத்துகளை அழித்து விட முடியுமா ? முடியவே முடியாது. எங்களைப் போல ஆயிரம் ஆயிரம் பேர்கள் முன்னணிக்கு வருவார்கள் .. “தொழிலாளிகளைப் பிரித்து வைத்து முதலாளிகள் கொழுத்து வருகிறார்கள் .. வர்க்க ஒற்றுமையைக் கட்டிக் காக்க நமது தொழிலாளர்கள் முன் வர வேண்டும்
தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்… அரசியல் போராட்டமே!!!
முதலாளித்துவ உற்பத்தி முறையில், சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை, தொழிலாளி வர்க்கம் அந்தந்த வளர்ச்சிக்கு ஏற்ப நடத்தியுள்ளது. வேலை நேர குறைப்பு உள்ளிட்ட, பல உரிமைகளை வென்றிட உதவியது. 1838 – 1848 காலங்களில் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் தொழிலாளர் மீதான வேலை நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்கள் நடந்தன. பிரிட்டிஷ் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இது கருதப்படுகிறது. இந்த போராட்டங்கள், புரட்சிகர சக்திகளின் முன்னெடுப்பால் நடந்தது என அரசியல் ஆய்வாளர்கள் இன்றளவும் கூறுகின்றனர்.
ஏகாதிபத்திய தாக்குதலும் உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்
நவீன தாராளமயமாக்கலின் தோற்றுவாய்க் குப் பின், முதன் முறையாக அரசியலும், அடிப் படை வர்க்கங்களான தொழிலாளர் வர்க்கம், விவசாயத் தொழிலாளர் மற்றும் ஏழை விவசாயிகளின் இயக்கங்களும் மையப்புள்ளியாக வெளிப்பட்டுள்ளன. வாலிபர், மாணவர், மாதர், சூழலியலாளர்கள், தலித், பழங்குடியினர், சிறு பான்மையினர், அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவினர்களின் முற்போக்கு சமூக இயக்கங்கள் இந்த நீரோட்டத்தில் இணைகிண்றனர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

