Tag: பொருளாதாரம்
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் ஆழமடையும் இந்திய பொருளாதார நெருக்கடியும்
கடந்த பல மாதங்களாக அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. அண்மையில் இந்த வீழ்ச்சி, வேகம் அடைந்துள்ளது. ஜனவரி 2012 இல் ஒரு அமெரிக்க டாலருக்கு 44 ரூபாய் என்று இருந்த நிலை மாறி 2013 செப்டம்பர் துவக்கத்தில் 68 என்று அதிகரித்தது. அதாவது 50 சதவிகிதத்துக்கும் அதிகமான சரிவு. அதிலும் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி 15 நாட்களில் மட்டும் 25% சரிவு. இது ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. மத்திய அரசு தினம் ஒரு குழப்பமான அறிக்கைவிட்ட வண்ணம் உள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பு ஏற்றவுடன், நம்பிக்கை அடிப்படையில் ரூபாய் மதிப்பு சிறிது அளவு மீட்சி அடைந்துள்ளது. மீட்சி தொடருமா? என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது? செய்ய வேண்டியது என்ன? நாம் காணும் நிகழ்வுகள் மக்களை எப்படி பாதிக்கும்? ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ள தற்கும் இந்திய பொருளாதார கட்டமைப்பு மற்றும் அரசின் கொள்கைகள் ஆகியவற்றிற்கும் என்ன தொடர்பு? பிரச்சினைக்குக் காரணம் பன்னாட்டு நிகழ்வுகள்தானா? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.
வெனிசுலாவில் நிலச் சீர்திருத்தம்!
வெனிசுலா நாட்டு கிராமப் புறங்களிலே பிரபுத்துவ பண்ணை முறையை எதிர்த்துப் போர்ப் பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே அரசு ஆதரவுடன் நிலச் சீர்திருத்தங்கள் தற்போது அமலாகி வரும் நாடு வெனிசுலா மட்டுமேயாகும். பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஏராளமான தரிசாகக் கிடக்கும் தனியார் பண்ணை நிலங்களை உற்பத்தியில் ஈடுபடுத்தும் இயக்கம் நிலச் சீர்திருத்தத்தின் முக்கியமானதொரு அம்சமாகும். மேலும் ஒட்டுமொத்த கிராமப்புற வளர்ச்சிக்கு அடிப்படையான உணவில் தன்னிறைவு பெறவும், வேளாண்மை லாபகரமாக இருக்கவும் தேவையான வகையில் நிலம் மற்றும் நீர் பயன்பாட்டை மாற்றி அமைத்தல் என்பது வேளாண் சீரமைப்புக் கொள்கையில் உள்ளடங்கிய அம்சங்களாகும். வேளாண் துறையில் மாற்றங்களை நிர்வகிக்கவும், தொழில் நுட்ப மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் தேவையான புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நில உடமையில் கூட்டுறவு அமைப்பை உருவாக்குவது என்பது தற்போதைய கொள்கையின் அடிப்படை அம்சமாகும்.
அநாகரிகப் பொருளாதாரத்தின் அதிரடித் தாக்குதல்..
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நவீன முதலாளித்துவ அமைப்பு முறையை மிகவும் கவனமாக கார்ல் மார்க்ஸ் ஆய்வு செய்துள்ளார். முதலாளித்துவ அமைப்பு முறையின் தரம் தாழ்ந்த பண்பைப் புரிந்து கொண்ட அவர் – அதற்கு அநாகரிகப் பொருளாதாரம் என்று பெயர் சூட்டினார். அந்த அநாகரிகப் பொருளாதார அமைப்பு முறையால் மீண்டும் மூழ்கடிக்கப்படும் நிலையில் இன்றைய தினம் இந்தியா இருக்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

