Tag: மார்க்சிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நகல் தீர்மானம் சொல்வது என்ன?
2022 ஏப்ரல் மாதத்தில் நடக்கவுள்ள, நமது கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் தீர்மானத்தின் நகலினை தற்போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ளது. (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டிய மாநாடு, கொரோனா பாதிப்பினால் 4 ஆண்டுகளுக்கு பின் நடக்கவுள்ளது) நகல் தீர்மானத்தை படிக்க உதவியாக ஒரு சுருக்கமான அறிமுகம் வழங்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
மார்க்சிஸ்ட் கட்சியும், மதுரை மாநாடுகளும் !
இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் மிகச்சரியான மார்க்சிய – லெனினியப் பாதையில் செல்கிறது; ஆகவேதான் அதிதீவிர இடதுசாரிகளும் வலதுசாரிகளும் சேர்ந்து நமது கட்சியைத் தாக்குகிறார்கள்; எத்தனை தாக்குதல்கள் வந்த போதிலும் நமது கட்சி நமது சொந்த வர்க்கத்திற்கும் மக்களுக்கும் தொடர்ந்து விசுவாசமாக பணியாற்றும்; நமது நாட்டின் திட்டவட்டமான சூழ்நிலைமைகளை ஆய்வு செய்து அதற்கு ஏற்ற விதத்தில் மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளை அமலாக்கும் என்று அத்தீர்மானம் அறைகூவல் விடுத்தது.
வரலாற்றை படிப்போம், வரலாற்றை படைப்போம் !
இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு என்பது வீரத்தாலும், தியாகத்தாலும் எழுதப்பட்ட ஒன்று. ஒன்றிய பாஜக அரசு மதவெறி நோக்கில் இந்திய அரசியல் வரலாற்றை திருத்தி எழுத முயலும் சூழலில் உண்மையான இந்திய வரலாற்றை மக்கள் முன் வைப்பது அவசியம். இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது. விடுதலை போராட்டக் காலத்தில் துவங்கி நவீன இந்தியாவை உருவாக்குவது வரை கம்யூனிஸ்டுகளின் பங்கு பாத்திரம் அளவற்றது. அந்த வகையில் இந்திய வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதி கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


