Tag: மார்க்சிஸ்ட்
ஏ.நல்லசிவன் நூற்றாண்டு : போராட்ட வாழ்க்கை தரும் பாடம் !
வர்க்க-வெகுஜன அமைப்புகளை வளர்த்திடாமல் கட்சியை பலப்படுத்திட முடியாது என்று அவர் அடிக்கடி குறிப்பிடுவார். கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வர்க்க-வெகுஜன அமைப்பில் வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவார். செய்ய வேண்டியது என்ன? நூலில் இருந்து பல அம்சங்களை தோழர் ஏ.என். அடிக்கடி மேற்கோள் காட்டுவார். பின்தங்கிய உழைப்பாளி மக்களை வர்க்க-வெகுஜன அமைப்புகளில் சேர்த்து, அவர்களுடைய கோரிக்கைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்க வைத்து, அதனூடே கம்யூனிசக் கொள்கையை அவர்களுக்குப் பயிற்றுவித்து அவர்களைக் கட்சிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை தனது அனுபவத்தில் இருந்து சுட்டிக்காட்டுவார்.
பால்மிரோ டோக்ளியாட்டியின் பாசிசம் குறித்த விரிவுரைகள்; தொழிலாளி வர்க்க அணுகுமுறைக்கான வழிகாட்டி
பாசிசமானது எப்பொழுதும் பொய்யான மற்றும் வாய்ச்சவடால் வடிவங்களிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான பகுதியின் அப்பட்டமான சர்வாதிகாரம் என்பதை அது மூடி மறைக்கவே முயற்சிக்கிறது.
சோஷலிச கியூபாவும் கொரோனா பெருந்தொற்றும்
ஆரோக்கியம் தொடர்பான மனிதவளம் திட்டமிட்ட அடிப்படையில் தொலைநோக்குடன் போதுமான அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கியூபா நாட்டில் மேலோங்கியுள்ள சமூக விழுமியங்கள் ஆரோக்கியத்தை மனித உரிமை எனக் கருதுகின்றன. (கியூபாவின் சோசலிச அரசியல் சாசனம் இதை உறுதிபடக் கூறுகிறது.) கியூபாவின் மருத்துவர்களும் செவிலியர்களும் லாப நோக்கத்தால் உந்தப்பட்டு செயல்படுவதில்லை. மாறாக, மக்கள் நலம் பேண அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
