Tag: மார்க்சிஸ்ட்
சோஷலிச கியூபாவும் கொரோனா பெருந்தொற்றும்
ஆரோக்கியம் தொடர்பான மனிதவளம் திட்டமிட்ட அடிப்படையில் தொலைநோக்குடன் போதுமான அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கியூபா நாட்டில் மேலோங்கியுள்ள சமூக விழுமியங்கள் ஆரோக்கியத்தை மனித உரிமை எனக் கருதுகின்றன. (கியூபாவின் சோசலிச அரசியல் சாசனம் இதை உறுதிபடக் கூறுகிறது.) கியூபாவின் மருத்துவர்களும் செவிலியர்களும் லாப நோக்கத்தால் உந்தப்பட்டு செயல்படுவதில்லை. மாறாக, மக்கள் நலம் பேண அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.
பெருந்தொற்றை வீழ்த்திய சீனாவின் சோசலிசம்!
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து சொந்த மக்களை பாதுகாப்பதில் அரசாங்கங்கள், பெரு நிறுவனங்கள், உள்ளூர் சமூகம் மற்றும் ஊடகங்களுடைய செயல்பாடுகளை பற்றிய ஆய்வினை சிங்கப்பூரின் இரண்டு முன்னணி ஆய்வு நிறுவனங்கள் நடத்தினார்கள். (Singapore’s leading social research agency Blackbox Research and technology company Toluna) 23 நாடுகளிலிருந்து பொதுமக்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் முதல் இடத்தினை சீனமும், இரண்டாம் இடத்தை வியட்நாமும் பிடித்திருந்தன. ஏகாதிபத்திய நாடுகள் இந்த பட்டியலில் 50 புள்ளிகளைக் கூட பெற முடியாமல் பின் தங்கியிருக்கிறார்கள்.
சிறு குறு தொழில்களே நெருக்கடிக்கான தீர்வு
மோடி அரசு பெரும் கார்ப்பரேட்கள் நலனில் மட்டுமே அக்கறையோடு செயலாற்றுகிறது. இந்த 6 ஆண்டுகளில் இந்தியாவின் முதல் 63 பெரும் பணக்காரர்களுக்காக கடந்த 6 ஆண்டுகளில் ரூ. 11 லட்சம் கோடிக்கு மேல் வங்கிக் கடன் தள்ளுப்படி, வரிச்சலுகைகள் என வழங்கியுள்ளது. ஒரு பகுதி பன்னாட்டு கம்பெனிகளில் பொருளாதார நெருக்கடி என்ற உடன் நிதிச் சந்தையில் தங்களது முதலீடுகளை திரும்ப எடுத்துக் கொண்டு ஓடி வருகின்றன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
