Tag: வர்க்கம்
“வர்க்கம்”
மார்க்சிய இயக்கம் மட்டுமே வர்க்கத்திற்கும் சாதிக்கும் இடையிலான உள்ளார்ந்த தொடர்பினை சுட்டிக்காட்டி, தனது புரட்சிகர திட்டத்தை வகுத்துள்ளது. எனவே மார்க்சிய நோக்கில், ‘வர்க்கம்’ என்ற சொல்லை புரிந்துகொள்வது, சமுதாயத்தை மாற்றியமைக்கும் புரட்சிகர போராட்டத்தில் மிக மிக அவசியம்.
சாதியும் வர்க்கமும்
முதலாளித்துவ நிலைக்கு முந்தைய அமைப்பான நிலப்பிரபுத்துவ பொருளாதார அடித்தளத்தின்மீது கட்டப்பட்ட கட்டமைப்பே சாதீய முறையாகும். அதாவது, அன்றைக்கு நிலவிய நிலம் சம்பந்தப்பட்ட உறவின் அடிப்படையிலேயே, சாதீய உறவுகள் ஆளும் வர்க்கங்களாலும் அவர்களின் தத்துவகர்த்தாக்களாலும் உருவாக்கப்பட்டது. அந்த நில உறவில் அடிப்படை மாற்றம் நிகழாமல், சாதீய அமைப்பில் அடிப்படை மாற்றம் சாத்தியம் இல்லை என்பதே உண்மை.
சாதி, வர்க்கம், இயக்கங்கள்
ஆனந்த் டெல்டும்டெவின் “சாதிக் குடியரசு” நூல், இந்திய மக்கள் எதிர்கொள்ளும் சமூக சிக்கல்கள் பற்றி ஆழமான பல கருத்துக்கள், ஏராளமான விவரங்கள் கொண்ட 400-பக்க நூலாக அமைந்துள்ளது. டெல்டும்டெவின் சிந்தனைகள் அனைத்தும் கவனத்தில் கொள்ள வேண்டியவை; விவாதத்திற்கும், விமர்சனத்திற்கும் உட்படுத்த வேண்டியவை. எனினும், முக்கிய கருத்துக்கள் சிலவற்றை மட்டும் இக்கட்டுரை விவாதிக்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


