Tag: விவசாயம்
தமிழக பொருளாதார வளர்ச்சியும் தாராளமயமும் – பகுதி 1
பெரும் பகுதி ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளை பொருத்தவரையில், தாராளமய கொள்கைகளால் பயிர் சாகுபடி விவசாயம் கட்டுபடியாகாததாக மாறியுள்ளது. இடுபொருள் விலைகள் உயர்வு, விளைபொருள் விலைகளின் வீழ்ச்சி மற்றும் உத்தரவாதமின்மை, உள்ளிட்ட அரசுகொள்கைகளின் விளைவுகளால் இந்நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழக கிராமங்களில் விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை மட்டும் வைத்து குடும்பம் நடத்துவது என்பது பெரும்பாலான நடுத்தர விவசாயிகளுக்குக் கூட சாத்தியம் இல்லை.
இந்திய நாடும் விவசாயிகளும்!
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாடு இம்மாத இறுதியில் நான்கு நாட்கள்; நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இந்த நான்கு நாட்களில் 188 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வர், 2000-த்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர் (ஏனெனில் காவல்துறையினரின் தகவல் படி 12 முறை தற்கொலைக்கு முயன்றால் தான் ஒரு முறை முயற்சி வெற்றி பெறுகிறது), 8000-த்திற்கும் அதிகமான விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவர் அல்லது விவசாயி என்ற அடையாளத்தை இழப்பர், பல விவசாயிகள் விவசாயக் கூலிகளாக மாறிடுவர்.
இந்தியாவின் சமகால வேளாண் நெருக்கடி!
இந்தியா விடுதலை அடைந்த பொழுது விவசாயம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தது. நிலப்பிரபுத்துவச் சுரண்டலும் அதன் மீது தொடர்ந்த காலனீயச் சுரண்டலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. 1900 முதல் 1950 வரையிலான ஐம்பது ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி ஆண்டு ஒன்றுக்கு அரை சதவிகிதம் என்ற அளவில், கிட்டத்தட்ட தேக்க நிலையில் இருந்தது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

